Thursday, October 14, 2021

அணி திரண்டு வாரீர்! உள்ளாட்சி தேர்தலில் மதிமுக வெற்றி பெற்றதையடுத்து சென்னையில் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியில், மறுமலர்ச்சி தி.மு.க போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடியுள்ளது. 

வெற்றிக்கான வியூகங்களை வகுத்து, வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்த தலைவர் வைகோ அவர்கள், 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணி அளவில், மதுரையில் இருந்து வான் ஊர்தியில் சென்னைக்கு வருகின்றார்கள். 

பாலைவனத்தில் ஒரு சோலையாய், சதுப்பு நிலத்தின் ஊன்றுகோலாய் அமைந்திட்ட வெற்றியைக் கொண்டாட, திராவிட இயக்கப் போர்வாள் தமிழ் இனக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களை வரவேற்க, கைகளில் கழகக் கொடி ஏந்தி சென்னை விமான நிலையத்திற்கு அணி திரண்டு வாருங்கள் என, கண்ணின் மணிகளை அன்புடன் அழைக்கின்றேன்.

மல்லை சி.ஏ.சத்யா
துணைப் பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
13.10.2021

No comments:

Post a Comment