Thursday, February 10, 2022

முதல்வரின் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பிற்கு மறுமலர்ச்சி திமுக ஆதரவு!

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வரும்  - திமுக தலைவருமான மாண்புமிகு தளபதி மு. க.°டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அமைப்பில் இணைந்திட முன்வருமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு, கடிதம் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார் .

இந்த வரிசையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு அழைப்பு விடுத்து  தளபதி மு.க.°டாலின் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார் .

இதை ஏற்று, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக, கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்தரிதா° அவர்கள் செயல்படுவார் என அறிவித்து, முதல்வரின் முயற்சிகளுக்கு வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்து பொதுச்செயலாளர் அவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

*ஆவடி அந்தரிதாஸ்* அவர்களைப் பற்றிய குறிப்புகள்:-

வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் அவர்கள், கழக தேர்தல் பணிச் செயலாளர், மறுமலர்ச்சி   தொழிலாளர் முன்னணி மாநிலத் தலைவர், திருவள்ளூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இடம் பெற்றுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கழகத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். HVF, ICF, MRF, SRF, ஸ்ரீராம் நிதி நிறுவனம், Ti Diamond Chains ஆகிய தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று,  நிர்வாக பொறுப்பில் பணியாற்றி வருகிறார். 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற  சட்டமன்ற தேர்தல்களிலும், 1996, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆவடி நகர்மன்ற தேர்தல்களிலும் கழகத்தின் சார்பில் போட்டியிட்டார். 15 க்கும்  மேற்பட்ட பொதுநல சங்கங்களில் சட்ட  ஆலோசகராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.02.2022

No comments:

Post a Comment