Monday, August 15, 2022

தகவல் தொழில்நுட்பத் துறையில் மனிதவள திட்டமிடலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வைகோ MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

கேள்வி எண். 2346

(அ) 2021-22 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் டிஜிட்டல் திறன் கொண்ட தொழில்நுட்பத்தில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(ஆ) தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதால், இந்த வளர்ச்சி தொடர்ந்து செயலாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டிஜிட்டல் திறன்களில் எதிர்காலப் பணியாளர்களை மேம்படுத்துவதற்கான மறுதிறன் திட்டங்களின் விவரங்கள் என்ன?
(இ) கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த வருவாய், ஆண்டு வாரியாக எவ்வளவு?
(ஈ) தகவல் தொழில்நுட்பத் திறன்களில் முதன்மை நிலையை அடைய மேகக் கணிமம், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் இணையதள விஷயங்கள் ஆகியவற்றில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனிதவள திட்டமிடலுக்குத் தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் 05.08.2022 அன்று அளித்துள்ள பதில் வருமாறு:-
(அ): தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) தகவலின் படி, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் 2021-22 நிதியாண்டில் நேரடியாக சுமார் 51 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்கள்.
(இ): இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த வருவாய் 2019-20 ஆண்டில்190, 2020-21 ஆண்டில் 196, 2021-22 ஆண்டின் மதிப்பீடு 227 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
(ஆ) மற்றும் (ஈ): தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கக் கூற்றுப்படி, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி தொடர்ந்து செயலாற்ற 2026 ஆம் ஆண்டுக்குள் மனிதவளத் தேவை சுமார் 95 லட்சமாக இருக்கும். அதில் மேகக் கணிமம், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் இணையதளம் போன்ற முக்கிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு 55 இலட்சம் தொழில்நுட்பப் பொறியாளர்கள் தேவை.
தொழில்துறையால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளில், புதிய பணியாளர்களை அதிகப்படுத்துதல், இரண்டாம், மூன்றாம் தர நகரங்களுக்கு செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்களில் எதிர்கால பணியாளர்களை உருவாக்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் இணைந்து “எதிர்காலத் திறன் (மறுதிறன்/மேல்திறன் திட்டம்(PRIME) என்ற தலைப்பில் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளன. வேலைவாய்ப்புக்கான தகவல் தொழில்நுட்ப மனிதவளம் மறு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது
எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக திறன் (FutureSkills PRIME) மறுதிறன் திட்டத்தின் கீழ் இதுவரை 8.20 லட்சம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.36 லட்சம் பேர் தங்கள் படிப்புகளை முடித்துள்ளனர். மேலும், தேசிய மென்பொருள் மற்றும்சேவை நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மறுதிறன் திட்டங்கள் ஆகியவற்றில் பணியாளர் தளம், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிப்பதற்காக தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் கல்வியாளர்கள் இணைந்து செயல்பட திட்டமிடப் பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
11.08.2022

No comments:

Post a Comment