Wednesday, December 27, 2017

இந்திய அரசு, மலேசிய அரசுக்கு கண்டனம்!

வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை விதித்து விமான நிலையத்தில் திரும்ப அனுப்பிய சம்பவம் குறித்து மத்திய அரசு மலேசியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து வைகோ அவர்களுக்கு 2017 டிசம்பர் 7ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடித விவரம் வருமாறு: -

2017 ஜூன் 9 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து பிரதம அமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தீர்கள். இந்தப் பிரச்சினை குறித்து கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு தனது கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்து உள்ளது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும், புதுடெல்லியில் உள்ள மலேசிய நாட்டின் தூதரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நடந்த சம்பவம் குறித்து இந்திய அரசின் ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என மதிமுக தலைமை நிலையம் 27.12.2017 அன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment