Thursday, February 28, 2019

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் - வைகோ வாழ்த்து!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 82 பள்ளிகளில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ, மாணவிகளும், 26 ஆயிரத்து 885 தனித்தேர்வர்களும் +2 தேர்வை எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வில் மாணவர்களுக்கு இணையான சம எண்ணிக்கையில் மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்வு பயமின்றி மிக நிதானமாக தேர்வு எழுதி வெற்றி பெற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உயர்நிலைக் கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவு வாயிலாகக் கருதப்படும் பொதுத் தேர்வு என்பதால் மாணவர்கள் மிக உற்சாகமாக தேர்வு எழுதி வெற்றி காணவேண்டும்.

இந்தப் பொதுத் தேர்வுக்காக 2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் அருகில் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற குழுவினரோ ஒலிப்பெருக்கியை சத்தமாக இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட வேண்டும். அதிர்வேட்டுகள் வெடிக்கக் கூடாது.

மாணவர்கள் தேர்வுக் கூடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லும் வகையில், பேருந்துகளை முறையாக அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்திட தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வழிவகை செய்திட வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும் வகையில் பெற்றோர் அவர்களிடம் ஒவ்வொரு நாளும் பேச வேண்டும். எவ்வித மன அழுத்தமோ, அச்சமோ இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத அது உதவும்.
மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பு, மனதை ஒருநிலைப்படுத்தி வினாத் தாளை நன்கு படித்து அதற்குரிய பதிலை எழுதிட வேண்டும்.

இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாமல் போனாலோ அல்லது தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்கள் மனநிலை பாதிப்படையத் தேவையில்லை. தமக்கான திறமையை நன்கு உணர்ந்து, பெற்றோரின் பாசம் அறிந்து, மாணவர்கள் அடுத்தத் தேர்வுக்கு ஆயத்தமாகிடும் வகையில் தன்னை ஆற்றுப்படுத்திட வேண்டும் என்றும் தங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

Wednesday, February 27, 2019

சேப்பாக்கம் பகுதி அவைதலைவர் உடலுக்கு திருமதி வைகோ அஞ்சலி!

கழக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்களுடன் நக்கீரன் கோபால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் உள்ள சேப்பாக்கம் பகுதி கழக அவைத்தலைவர் மோகன் அவர்கள் மறைந்ததையொட்டி 27-02-2019 அன்று அவரது திருவுடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் துணைவியார் ரேணூகாதேவி அவர்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். 

உடன் தென்சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கழககுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் துரை.குணசேகரன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் கார்த்திக், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார், வேளச்சேரி பகுதி செயலாளர் செல்லப்பாண்டியன், திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் சி.என்.அண்ணாதுரை மற்றும் கழக தோழர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

ஆளுநர் மாளிகையின் அதிகார அத்துமீறல்-வைகோ கண்டனம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் செயலாளர் பொறுப்பில் உள்ள ராஜகோபால் அவர்களின் தாயார் சரஸ்வதி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 
அவரைக் கவனித்துக் கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஏழு பேர் 12 மணி நேரம் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. மெடிக்கல் கவுன்சில் விதிமுறைகளை மீறி முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்களை, இதுபோன்ற முக்கியப் பிரமுகர்களை கவனிக்க நியமித்ததை எதிர்த்த மருத்துவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். 


ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் அவர்கள் தாயார் ராஜ்பவனுக்கு உடல்நலம் தேறிய நிலையில் சென்றுவிட்டார். 


ஆனால் அங்கும் அவரைக் கண்காணிக்க மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை உத்தரவிட்டது. ஆனால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ராஜ்பவனுக்கு செல்ல முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதால், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை ஆளுநர் மாளிகை மிரட்டி வருவதாகத் தெரிகின்றது. ராஜ்பவனுக்கு ஆளுநரின் செயலாளர் தாயாரைக் கவனிக்கச் சென்ற இன்னொரு மருத்துவரை, வேறு ஒருவர் வரும்வரை வெளியே விட முடியாது என்று தடுத்து வைத்திருந்த செய்தி அறிந்து மருத்துவர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.


ஆளுநர் மாளிகையின் அதிகார அத்துமீறலும், மருத்துவர்களை மிரட்டும் போக்கும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஏழை எளிய பொதுமக்களுக்குத் தன்னலம் கருதாமல் சேவையாற்றி வரும் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களை, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிபணிய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை நினைப்பது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கின்றேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 27-02-2019 அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tuesday, February 26, 2019

இந்திய கம்யூனிஸ்ட் நடத்தும் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு வைகோவிற்கு அழைப்பு!

கோவையில் 27-02-2019 அன்று புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் நடத்தும் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி திரு.வீரபாண்டியன் அவர்கள் நேரில் வழங்கினார்.

Friday, February 22, 2019

கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூகம். தொகுதி எண்ணிக்கை விரைவில் அறிவிப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட பேச்சு வார்த்தை நடத்த இன்று 22-02-2019 திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ அவர்களின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் திரு துரைமுருகன் அவர்களின் தலைமையிலான குழுவினருடன் மறுமலர்ச்சி திமு கழக பொருளாளர் திரு கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. 

இதில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் டாக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூடாது - வைகோ அறிக்கை!

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு கொண்டுவந்து, மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்று சட்டத் திருத்தம் செய்ய முனைந்தபோது, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தன. அதனால், இந்தப் பொதுத் தேர்வைக் கொண்டு வருவது அந்தந்த மாநிலங்களின் விருப்பம் என மாற்றம் செய்து, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய மாநில அரசின் முன்னாள் கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அவர்கள், ‘இந்தப் பொதுத் தேர்வைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என்று தொடர்ந்து கூறி வந்தார்.
ஆனால் திடீர் திருப்பமாக, தமிழக அரசின் நீண்டகால கொள்கை முடிவை மாற்றி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவரும் முயற்சியை தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருவதாக அறிகிறோம்.
ஏற்கனவே நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த மத்திய அரசு, தற்போது சின்னக் குழந்தைகளுக்கும் பொதுத் தேர்வைக் கொண்டுவந்து வடிகட்ட நினைப்பதைப் புறக்கணிக்க வேண்டிய தமிழக அரசு, மாநில அரசுக்கு முடிவு எடுக்கும் உரிமை இருந்தும்கூட, மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க இந்தப் பொதுத் தேர்வை அமுல்படுத்த முனைவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளின் கற்றல் பெரும்பாலும் பெற்றோர்களின் அரவணைப்பில்தான் நடைபெறுகின்றது. மலைவாழ் மாணவர்களுக்கும், கிராமத்தில் வாழும் விவசாய கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், அந்தக் கற்றல் அரவணைப்பு பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை.
அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பும், கற்றல் சூழலும் உள்ள பள்ளிகளை அரசு உருவாக்கவில்லை. இது அரசின் குற்றமே அல்லாமல், மாணவர்களின் குற்றம் அல்ல.
பிஞ்சுக் குழந்தைகளின் கற்றல் நிலைக்கு, குடும்பச் சூழலும், பள்ளிச் சூழலும்தான் காரணமே தவிர, குழந்தை காரணம் அல்ல. ஆனால் அதன் சுமையை, விளைவை குழந்தைகளின் மேல் திணிப்பது கொடுமையான வன்முறை ஆகும்.
தற்போதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு இல்லாத நிலையில், பல தனியார் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை நன்றாக உள்ளது என்றால், அதற்குக் காரணம் பள்ளி நடத்தும் முறையே அன்றி, பொதுத்தேர்வு அல்ல.
இன்றைக்கு 9 ஆம் வகுப்புக்குப் பிறகு கடும் மன அழுத்தத்தோடுதான் மாணவர்கள் படிக்க வைக்கப்படுகின்றார்கள். இனி இது 4 ஆம் வகுப்பில் இருந்தே தொடங்கிவிடும். அப்போதிருந்தே மதிப்பெண்ணைக் கேட்கத் தொடங்கி, அந்த மாணவனின் அற்புதமான குழந்தைப் பருவத்தை புத்தகத்துக்கு உள்ளேயே முடக்கி விடுவர். விளையாட்டு, உடற்பயிற்சி என அனைத்தையும் இழந்து விடுவார்கள்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு, கல்வியாளர்கள் உட்பட பலரின் எதிர்ப்புக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், இந்த ஆண்டு இதனை அமுல்படுத்த மாட்டோம், அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிக்கப் போவதும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தப் போவதுமான இந்தப் பொதுத்தேர்வு நடைமுறையை, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எந்த ஆண்டும் கொண்டுவர மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 22-02-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, February 21, 2019

2019 நாடாளுமன்றத் தேர்தல் மதிமுக பேச்சுவார்த்தைக்குழு!

நடைபெற உள்ள 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் இடம்பெறுவோர்

1. அ. கணேசமூர்த்தி -- கழகப் பொருளாளர்
2. மல்லை சி.இ. சத்யா -- கழகத் துணைப் பொதுச்செயலாளர்
3. புலவர் சே. செவந்தியப்பன் -- அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்
4. டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் -- ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்
5. டாக்டர் க. சந்திரசேகரன் -- உயர்நிலைக்குழு உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பின்பேரில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்குழு நாளை 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்கிறது.

கேரளா மாநில எதிர்க்கட்சித் தலைவர் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும் - கேரளா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு ரமேஷ் சென்னிதலா அவர்களின் மூத்த மகன் திருவளர்ச்செல்வன் மருத்துவர் ரோகித்துக்கும், திருவளர்ச்செல்வி மருத்துவர் சிறீஜா அவர்களுக்கும் பிப்ரவரி 17 ஆம் நாள் எர்ணாகுளத்தில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று பிப்ரவரி 21 ஆம் நாள் மாலையில் புதுமணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு இடையில், கேரளா மாநில அரசியல் மோதலில் இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு உயிர் இழந்ததால், இன்று மாலையில் நடைபெற இருந்த தனது இல்லத்துத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரமேஷ் சென்னிதலா ரத்து செய்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக ரமேஷ் சென்னிதலா அவர்களுடன் அரசியல் எல்லை கடந்து வைகோ அவர்கள் நட்புகொண்டு பழகி வந்ததால், வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், ரமேஷ் சென்னிதலா அவர்களின் இல்லத்துக்கு வைகோ அவர்களும், அவரது துணைவியார் திருமதி ரேணுகாதேவி அவர்களும் இன்று காலை ஒன்பதரை மணி அளவில் ரமேஷ் சென்னிதலா இல்லத்துக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

ரமேஷ் சென்னிதலா அவர்களும், அவரது துணைவியாரும், அவரது குடுபத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்கள் இல்லத்தில் மனமகிழ்ந்து உரையாடிவிட்டு வைகோ திரும்பினார்.

புகைப்படத்தில் நிற்பவர்கள் ரமேஷ் சென்னிதலா, திருமதி அனிதா ரமேஷ் சென்னிதலா, புதுமணமக்களான மருத்துவர் ரோகித், மருத்துவர் சிறீஜா, வைகோ, திருமதி ரேணுகாதேவி.

தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் இன்று 21-02-2019 வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, February 20, 2019

மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 25.02.2019 திங்கள்கிழமை, காலை 11.00 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என தாயக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, February 18, 2019

நீதி வென்றது! 13 பேர் சிந்திய இரத்தம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது; அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது!

ஸ்டெர்லைட் திறக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வைகோ பேசிய விபரம்:-

இன்று என் வாழ்க்கையில், மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்று, மகிழ்ச்சியின் ஆகாய வெளியில் நான் மிதந்து கொண்டு இருக்கின்றேன். I am flying in the skies of happiness. 

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாகப் போராடி வருகின்றேன். அதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் தீர்ப்பு வந்தது. நீதியரசர் பால் வசந்தகுமார், எலிபி தர்மாராவ் மற்றும் ஒரு நீதிபதி அமர்வில், ஸ்டெர்லைட்  ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்தார்கள். வேதாந்தா நிறுவனம் மறுநாளே உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, உண்மைகளை மறைத்துக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை ஆணை பெற்றார்கள். அதன்பிறகு, இத்தனை ஆண்டுக்காலமாக வழக்கு நீடித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் நாள் கிராம மக்களின் போராட்டம் தொடங்கியது. 100 ஆம் நாளான மே 22 ஆம் நாள், காவல்துறை திட்டமிட்டு, 13 பேரைச் சுட்டுப் படுகொலை செய்தது. ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படையாக, அண்ணா தி.மு.க. அரசின் காவல்துறை செயல்பட்டது.

உடனடியாக நான், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். எனக்காக அஜ்மல்கான் வாதாடினார்.

அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், அண்ணா தி.மு.க. அரசு, கொள்கை முடிவு எடுக்கவில்லை. தமிழக அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை; சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவல் என்ற நிலையில் இருந்தது. ‘Running with the hare and  hunting with the hound’ என்ற கண்ணாமூச்சி மோசடி நாடகத்தை நடத்தியது. அதாவது முயலோடு சேர்ந்தும் ஓடுவது; வேட்டைநாயோடு சேர்ந்து துரத்துவது. 

இதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்குச் சென்றது. அங்கே நீதிபதி யார்? உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற பத்தாவது நிமிடமே, பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவர் என்னைப் பேசவே விடவில்லை. 

மற்ற எதிர்மனுக்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால், வைகோவின் எதிர்மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். ஏன்? என்று கேட்டேன். 

இவர் அரசியலுக்காகப் போராடுகிறார். தேவை இல்லாமல், பழைய பிரச்சினைகளைக் கிளப்புகின்றார். எனவே, இவரது மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றார். நான் கடுமையாகப் போராடினேன். அதன்பிறகு, என்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொண்டார்கள். 

அதன்பிறகு, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான அமர்வு, ஏழு நாள்கள் விசாரணை நடத்தியது. நான் ஒன்றரை மணி நேரம் வாதாடினேன். 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிகளின்படி,  ஆலையின் புகைபோக்கி உயரம் 100 மீட்டர் இருக்க வேண்டும்; ஆனால், 60 மீட்டர்தான்  இருக்கின்றது. இத்தனை ஆண்டுகளாக நச்சுப்புகையை வெளியேற்றி இருக்கின்றது. ஆனால், இந்தத் தகவலை, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சொல்லவில்லை; தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடந்தையாக இருக்கின்றது என்ற உண்மையை, அங்கே பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேலழகன் என்ற அதிகாரி என்னைச் சந்தித்துக் கூறினார். இதை நான், தருண் அகர்வால் அமர்வில் கூறினேன்.

அதன்பின்னர், ஆலையைத் திறக்கலாம் என்று அவர் அளித்த உத்தரவில், என் வாதத்தில் உள்ள நியாயங்களை 15 பாராக்கள் சொல்லி, புகைபோக்கியின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆலையில் 4 புகை போக்கிகள் இருப்பதாக, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் பொய் சொன்னார். அதை நான் கடுமையாக எதிர்த்தேன். யாரை வேண்டுமானாலும் போய்ப் பார்க்கச் சொல்லுங்கள்; அங்கே ஒரேயொரு புகைபோக்கி மட்டும்தான் இருக்கின்றது. சல்ப்யூரிக் அமிலம், பாஸ்பரம் அமிலப் புகை போக்கிகளைப் பற்றி இவர் சொல்கிறார் என்றேன். 

சுற்றுச் சூழல் விதிகளுக்குப் புறம்பாக இருக்கின்றது; உற்பத்தியைக் குறைக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது. உற்பத்தியைக் குறைக்க முடியாது; புதிய புகை போக்கிகள் அமைப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றார்கள்.

இதன்பிறகு, ஆலையைத் திறக்கலாம் என்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத் வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.

உச்சநீதிமன்றத்தில் ரோகிங்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

நான் பொடா சட்டத்தின் கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவரது தந்தையார் ~பாலி நாரிமன் எனக்காக வாதாடி இருக்கின்றார்.

உச்சநீதிமன்றத்தில் என்னைப் பார்த்த நாரிமன், ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். கருப்புக் கோட்டு போட்டு இருந்ததால், என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை, Who are you? என்று கேட்டார்.

I am vaiko. நானும் இந்த வழக்கில் ஒருவன் என்றேன். உங்களுக்காக யார் வாதாடப் போகிறார்? என்று கேட்டார். நானே வாதாடப் போகிறேன் என்றேன். வழக்கமாக நீதிமன்றத்தில் இதைச் சொல்ல அனுமதிப்பது இல்லை. ஆனால், நீதிபதி நாரிமன் பதிவாளரை அழைத்து, ‘வைகோவின் மனுவையும் இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம்’ என்றார். எடுத்துக் கொண்டார்கள். 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்; நான் இன்னும் 10 நிமிடங்களில் ஆணை பிறப்பிக்கப் போகின்றேன் என்று சொன்னார். 

நான் மனம் உடைந்துபோய்க் கேட்டேன். நான் பேசுவதற்கு நீங்கள் வாய்ப்பே தரவில்லையே? என்று கேட்டேன். என்ன பேசப் போகின்றீர்கள்? என்று கேட்டார். 

தூத்துக்குடியில் 13 பேர் திட்டமிட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அவர்களுடைய இரத்தம் இந்த நீதிமன்றத்தில் நீதி கேட்கின்றது என்று சொன்னேன். 

‘The blood spilled in the soil of Thoothukudi on sterlite issue, who were brutally killed by the pre meditated plan of the Tamilnadu Police and the Tamilnadu Government, henchmen of sterlite, crave justice in this court’ என்று சொன்னேன்.

அதற்கு முன்பு, ஆலையைத் திறக்கலாம் என்று 2013 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, நான் இரண்டு மேல் முறையீடு செய்து இருந்தேன். தமிழ்நாடு அரசும் ஒப்புக்கு ஒரு மேல் முறையீடு செய்து இருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு வழக்கறிஞரோ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞரோ, இதே பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றது என்பதைச் சொல்லவே இல்லை. இதை நான் சொன்னபோது, நீதிபதி ‘அப்படியா?’ என்று கேட்டார். அதையும் இத்துடன்  சேர்த்து விசாரியுங்கள் என்றேன்.

உடனே கோர்ட் மாஸ்டரை அழைத்தார். “2013 இல் போட்ட வழக்குகளையும், இத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். 

இப்பொழுது நான் முதல் அமைச்சரைக் கேட்கிறேன். ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக, உங்கள் வழக்கறிஞர் ஏன் சொல்லவில்லை? ஏன் இதை மறைத்தீர்கள்? 

இதன்பிறகு, 2013 வழக்குகளையும்சேர்த்து விசாரித்தார்கள். 40 நாள்கள் விசாரணை. ஆலையைத் திறந்து விடுவார்கள் என்ற நிலையில், 2019 பிப்ரவரி 4,6,7 ஆகிய நாள்களில் விசாரணை நடந்தது. 4 ஆம் தேதி இரவில் சென்னைக்கு வந்து, நெல்லை சென்று, மறைந்த சுப்புரத்தினம் மகன் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு அன்று இரவே மீண்டும் டெல்லி சென்றேன்.

நீதிமன்றத்தில் உட்கார்ந்து இருந்தேன். தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் பேசி முடித்தவுடன் எழுந்தேன். உங்களை நான் அழைக்கவில்லை என்றார் நீதிபதி ரோகிங்டன் நாரிமன். வெட்கப்பட்டு உட்கார்ந்து விட்டேன். மறுநாள், இதே போல ஆகிவிடுமோ? என்று கருதி, அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் நான்கு மணி நேரம் வாதாடினார்.

அடுத்து, தமிழ்நாடு அரசு வழக்குரைஞரை அழைக்கப் போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது, மிஸ்டர் வைகோ, புதிதாக என்ன சொல்லப் போகின்றீர்கள்? என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

அவர்கள் எங்கே போனாலும் சரி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று, வேதாந்தா அதிபர் அனில் அகர்வால், எந்த அடிப்படையில் சொன்னார்? என்று கேட்டேன். அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்று, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் சொன்னார். நான் அதை நிரூபிக்கின்றேன் என்று சொன்னேன்.

இவர் அரசியலுக்காக எதிர்க்கின்றார்கள். இரண்டு லட்சம் பேரைத் திரட்டுவோம் என்பார்கள். 20 ஆயிரம் ஓட்டு வாங்க முடியாது என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறினார்.

இதை நீதிமன்றத்தில் நான் கேட்டேன். நீதிபதி அவர்களே, அரசியல்வாதியாக இருப்பது பாவமா? குற்றமா?  “Is it a sin to be a politician?’’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்றார் நீதிபதி.

இதே வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டுக்காகக் கே.கே. வேணுகோபால் வாதாடினார். அப்போது நான் வாதாடும்போது சொன்னேன்: நான் சுயநலத்திற்காகவோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்காகவோ ஸ்டெர்லைட்டை எதிர்க்கவில்லை. மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கக்  கொடுத்து இருந்த உரிமத்தை, விவசாயிகள் எதிர்ப்பின் காரணமாக, சரத் பவார் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிறுவனம் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை? அதன்பிறகு, கோவா, குஜராத் மாநிலங்களில் அமைக்க முயன்று ஒப்புதல் கிடைக்காததால், தமிழகத்தில் அண்ணா தி.மு.க. அரசிடம் உரிமம் பெற்று, தூத்துக்குடி மக்களுக்கு எமனாக வந்து உட்கார்ந்து இருக்கின்றார்கள் என்று சொன்னேன். 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டின் லிபரான் அவர்கள், There is no need to vouch for your honesty and integrity; it is known to everybody’ உங்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் எவரும் சான்றிதழ் தரத் தேவை இல்லை;  அனைவரும் அறிந்த ஒன்று’ என்று சொன்னார். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு நாளேடோ, ஒரு வார ஏடோ, இதை வெளியிடவில்லை. வைகோவின் நாணயத்திற்கு, தலைமை நீதிபதி லிபரான் நற்சான்றிதழ் வழங்கினார் என்று ஒரு வரி எழுதவில்லை. மாறாக, அவர் ஏதாவது ஒரு சிறு குறை சொல்லி இருந்தால், அதைத்தான் எட்டுக்காலம் செய்தியாக வெளியிட்டு இருப்பார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னேன்.

உடனே நீதிபதி நாரிமன் சொன்னார்: “We also know that அது எங்களுக்கும் தெரியும்” என்றார்.

அதன்பிறகு, என்னென்ன காரணங்களுக்காக ஸ்டெர்லைட்  ஆலை மூடப்பட்டது? வெளியாகின்ற நச்சுப்புகையின் அளவு என்ன? புகை போக்கி 100 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்; ஆனால், 60 மீட்டர்தான் இருக்கின்றது. அதனால், 2013 மார்ச் 23 ஆம் தேதி ஆலையில் இருந்து வெளியான நச்சுப்புகையால், தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கானவர்கள் மயங்கி விழுந்தார்கள். உடனே நான் அங்கே சென்று போராட்டம் நடத்தினேன்.  

இந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்து விடும் என்று கருதிய முதல்வர் ஜெயலலிதா,  ஒரு நாடகம் நடத்தினார்.  மார்ச் 30 ஆம் நாளே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக, ஆலையை மூடும்படி ஒரு உத்தரவு பிறப்பித்தார்கள். 

ஆனால், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பட்நாயக், கோகலே அமர்வு, ஆலையைத் திறக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மகா பெரிய சக்திகளை எதிர்த்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடுகின்ற, இந்த மனுதாரரின் நேர்மையை, துணிச்சலை நாங்கள் பாராட்டுகின்றோம் என்று கூறி இருந்தனர். 

நான் உடனே நீதிபதியிடம் சொன்னேன்: “மராட்டியத்தைப் போல நாங்கள் ஆலையை உடைத்து நொறுக்கவில்லை.  நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பினோம்.ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் வீரத்தில் மராட்டியர்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல. பிரித்தானியப் பேரரசை எதிர்த்து, முதன்முதலில் வாள் உயர்த்தியவர்களே நாங்கள்தான்” என்றேன். அப்போது நீதிபதி, “நீங்கள் பொதுநலனுக்காகப் போராடுகின்றீர்கள். தொடர்ந்து செயல்படுங்கள்” என்றார். 

இதை எல்லாம் 7 ஆம் தேதி என்னுடைய வாதத்தில் எடுத்துச் சொன்னேன். எதிர்த்தரப்பிற்கு 40 வழக்கறிஞர்கள் இருக்கின்றார்கள். எனக்கு ஆனந்த செல்வமும், சிவபால முருகனும் எடுத்துக் கொடுக்கின்றார்கள். 40 தீர்ப்புகள் இருக்கின்றன. அதை எல்லாம் சுருக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பக்கங்களைப் புரட்ட வேண்டும். அதனால் எனக்குப் பதற்றமாக இருக்கின்றது என்று நீதிபதியிடம் சொன்னேன். உடனே நீதிபதி நாரிமன், ‘இல்லை.  எங்களைத்தான் நீங்கள் பதற்றப்பட வைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்’ என்றார். அங்கே இருந்த அனைவரும் சிரித்தனர். 

தொடர்ந்து வாதங்களை எடுத்து உரைத்தேன். உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஆலைகளில் உள்ள புகை போக்கிகளின் உயரத்தைப் பற்றிய ஆவணங்களைக் கொடுத்தேன். அதை நீதிபதி ‘பார்த்துவிட்டேன்’ என்றார். அதே ஸ்டெர்லைட், ஆலையின் இரண்டாம்  கட்ட விரிவாக்கத்தில் 165 மீட்டர் உயரத்தில் புகைபோக்கி அமைக்கப் போவதாகச் சொல்லி இருக்கின்றார்கள் என்றேன். 

அது மட்டும் அல்ல; ஸ்டெர்லைட் குறித்து உண்மை அறியும் குழுவுக்கு, தமிழ்நாட்டைச்  சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் எவரையும் நியமிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட்  சொன்னது.  அப்படி என்றால், தமிழ்நாட்டு நீதிபதிகள் நேர்மை தவறியவர்களா? உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உலகப் புகழ் பெற்ற தீர்ப்புகளை வழங்கியவர்கள் எங்கள் தமிழ்நாட்டு நீதிபதிகள். இந்திய நாடே புகழ்கின்ற தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களால் வார்ப்பிக்கப்பட்டவன் நான். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், தாமிர உற்பத்தி அடியோடு முடங்கி விட்டது; ஆயிரக்கணக்காக கோடிகள் நட்டம் என்கிறார்கள். மராட்டியத்தில் விவசாயிகள் ஆலையை உடைத்து நொறுக்கியபோது, 300 கோடி நட்டம் ஆனதே, ஏன் நீங்கள் நீதிமன்றம் போகவில்லை? ஆஸ்திரேலிய நாடு, மோசமான தரத்தில் உள்ள தாமிர அடர்த்தியைத்தான் தருகின்றார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உயர்தரத் தாமிரம் கிடைக்கின்றது. ஏன் அங்கே வாங்கவில்லை? 

தாமிர அடர்த்தியைப் பிரிக்கும்போது, அதில் தங்கம், வெள்ளியும் எடுக்கின்றார்கள். நிக்கல், ஆர்சனிக், லெட், குரோமியம், துத்தநாகம், கார்டிமம் இவை எல்லாமே, புற்று நோயைத் தருகின்ற கார்சோஜெனிக் காரணிகள். அது எந்த அளவிற்கு வெளியாகிறது என்பதை ஸ்டெர்லைட் கூகுள் ஆவணங்களில் இருந்தே எடுத்துக் கொடுத்தேன். இதனால், மக்களுக்கு நோய்கள் வந்து, நிறையப் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் 100 கோடி செலவழிப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால், மக்கள் உயிர்தான் முக்கியம். இதற்கு ஆதரவாக, இந்திய அரசியல் சட்டத்தின் முகப்பு வரிகளை எடுத்துச் சொன்னேன். 

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity and to give ourselves this constitution;  என்பதுதான் கருத்து. 

மக்களுக்காகத்தான்  சட்டம். சட்டத்திற்காக மக்கள் அல்ல.

அது மட்டும் அல்ல; இந்திய அரசியல் சட்டம் 48 ஏ பிரிவு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று சொல்கின்றது. அந்த அடிப்படையில், மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளைக் கண்டு அறிவதற்காக, மதுரை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஹென்றி திபேன் அவர்கள் அமைத்த 13 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், 3 பேர் முன்னாள் நீதிபதிகள், காவல்துறைத் தலைவர்கள் இருவர், இரண்டு மருத்துவர்கள், இரண்டு தடயஇயல் அறிஞர்கள்,  ஒரு வழக்குரைஞர் இடம் பெற்று இருந்தனர். அவர்கள், ஏழு நாள்கள் இடத்தைப் பார்வை இட்டு,  2300 பக்க அறிக்கை; ஐந்து தொகுப்புகளாகத் தாக்கல் செய்து இருக்கின்றனர். 

அதில், அவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள் தெரியுமா? 

போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே, அரசு வண்டிகளுக்குக் காவல்துறையினரே தீ வைத்தார்கள். போராட்டக்காரர்கள் சிலரை அடையாளம் கண்டு, அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்காக, நெற்றியிலும், மார்பிலும் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். ஸ்னோலின் என்ற 16 வயது பள்ளி மாணவியின் வாயில் புகுந்த குண்டு, பின்மண்டை வழியாக வெளியேறி இருக்கின்றது. தலை வெடித்து மூளை சிதறி இறந்து போனாள். தூக்குவாளியில் சோறு கொண்டு போன, திரேஸ்புரம் பெண்மணியைப் பத்து அடி அருகில் இருந்து சுட்டு இருக்கின்றார்கள். அவரது மண்டை சிதறி, மூறை கீழே கிடந்தது. அன்று மாலையே அங்கே சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே அரசியல்வாதி நான்தான். அன்று இரவு 9 மணி முதல் விடிகாலை 4 மணி வரை, அனைத்து வீடுகளுக்கும் சென்றேன். வேறு யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை. அந்த மக்கள், நீதி கேட்கின்றார்கள் என்று சொன்னேன்.  

இன்றைக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக நீதிபதிகள் அறிவித்து இருக்கின்றார்கள். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டதாக, நீதிபதி நாரிமன், நீதிபதி நவீன் சின்கா அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. 

நான் பதறிப்போய்ப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, நீதிபதி நாரிமன் என்னைப் பற்றி நீதிபதி நவீன் சின்காவிடம் சொல்லிக்கொண்டே இருந்ததாக, உடன் இருந்தவர்கள் சொன்னார்கள். 

தமிழ்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி இருக்கின்ற உச்ச நீதிமன்றத்திற்கு, நீதிபதிகளுக்குத் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றேன். நீதி காப்பாற்றப்படும்; ஜனநாயகம் பாதுகாக்கப்படும் தங்களைக் காக்கின்ற காவல் தெய்வங்களாக நீதிபதிகளை மக்கள் கருதுகின்றார்கள். 

தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்குப் போகும்படிக் கூறி இருக்கின்றார்கள். இனி, அவர்கள் அங்கே போவார்கள். 

விட மாட்டோம்; ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க விட மாட்டோம். 

தூத்துக்குடி மக்களின் உயிர்களைப் பறிக்கின்ற, கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்கின்ற ஸ்டெர்லைட் நிர்வாகம், நீதிக்கு முன்னால் மண்டியிட்டுத் தோற்றது தோற்றது தோற்றது. நீதி வென்றது; அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது.

தூத்துக்குடி மக்களின் 100 நாள்கள் அறப்போராட்டம் மட்டும் அல்ல; 13 பேர் சிந்திய இரத்தம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது. நீதி வாழ்க என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது செய்தியாளர் சந்திப்பில் இன்று 18-02-2019 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, February 11, 2019

எர்ணாவூர் நாராயணன் வைகோவுடன் சந்திப்பு!

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இன்று 11-02-2019 அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்து வைகோ அவர்களிடம், தனது இல்ல திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.

பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி அவர்களின் உதவியாளர் வைகோவுடன் சந்திப்பு

பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி அவர்களின் உதவியாளரும் மலேசிய தமிழர் குரல் பத்திரிக்கை அமைப்பைச் சார்ந்த திரு டேவிட் மார்ஷல் அவர்கள் இன்று 11-02-2019 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்தார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் குடும்பம் வைகோவுடன் சந்திப்பு!

முல்லைப் பெரியாறுக்காக தன்னுயிரை ஈந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அண்ணன் மகள் செல்வி வெண்ணிலா அவர்கள் தனது திருமண அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்களிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

வெண்ணிலா அவர்கள் படிக்க உதவி செய்தும், வேலை வாங்கித் தந்ததும் அந்த குடும்பத்தை பாதுகாக்க உதவியர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைத் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறும் குற்றத்துக்கு இடமளிக்காதே! வைகோ அறிக்கை!

இந்திய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி, மே முதல் வாரம் வரை ஐந்து கட்டங்களாக நடைபெறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலையும் இணைந்து நடத்துவதுதான் சரியான நியாயமான, நேர்மையான நடுநிலை தவறாத அணுகுமுறையாகும்.

ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று இதுவரை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிக்கவில்லை என்பதும் ஜனநாயகத்துக்கு எதிரான அணுகுமுறைதான்.

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒன்றாக நடத்தும் நிலை ஏற்பட வேண்டும் என்று கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான விபரீதமான கருத்தைக் கூறி வந்தார். ஆனால், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் இணைந்து நடத்துவதுதான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையம் எந்தவிதமான பாரபட்சத்துக்கும் இடம் தராமல், ஆளும் கட்சிக்கு அணுசரணையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்படும்போதுதான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும் - ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

கிடைக்கின்ற தகவல்களின்படி, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் இணைந்து நடத்தாமல், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடத்திக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அழுத்தம் தருவதாகத் தெரிகிறது. அந்த அழுத்தத்துக்கு உடன்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்பட்டால், ஜனநாயகக் கோட்பாட்டுக்கு கேடு செய்கின்ற குற்றவாளி என்ற சரியான குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் ஆளாக நேரிடும்.

இத்தகைய ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கையாக தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. களங்கத்துக்கு ஆளாக வேண்டாம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், தமிழக மக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று  11-02-2019 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, February 7, 2019

ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு இன்று 07-02-2019 ஒத்திவைக்கப்பட்டது.

இதில் மதிமுக பொதுச் செயலாளரும் வைகோவும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த  நாளும் வாதத்தில் கலந்துகொண்டார்.

மேலும் அனைத்து தரப்பினரும் வருகிற திங்கள்கிழமை 10-02-2019 ஆம் தேதி எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, February 6, 2019

தமிழகம் வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி - வைகோ அழைப்பு!

14 மே மாதம் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு மத்தியில் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து வரும் பா.ஜ.க. அரசு, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து வருகிறது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று மதவெறி சனாதன சக்திகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருவதை நிலைநாட்டும் வகையில், மோடி அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவது பேராபத்து ஆகும்.

மத சகிப்பின்மை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதிஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, கல்வித்துறை காவிமயம், அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப் பிடியில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகிறது.

காந்தி அடிகளை சுட்டுக்கொன்ற சனாதன மதவெறிக் கூட்டம், அவரது 71 ஆவது நினைவுநாளான ஜனவரி 30 ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம், அலிகாரில் இந்து மகாசபா அலுவலகம் எதிரே காந்திஜி உருவபொம்மையை வைத்துத் துப்பாக்கியால் சுட்டு, அதிலிருந்து இரத்தம் வழிந்தோடுவதைப் போன்று சித்தரித்து உள்ளனர். இக்கொடூர வக்கிரச் செயலை இந்துமகா சபா பெண் தலைவர் பூஜா சகுண் பாண்டே தலைமையில் நிகழ்த்தியது மட்டுமின்றி, காந்தியைக் கொலைசெய்த நாதுராம் விநாயக கோட்சே புகழ்பாடி உள்ளனர்.

காந்தி முதல் கௌரி லங்கேஷ் வரை சங்பரிவாரை எதிர்த்தவர்களைச் சுட்டுக் கொன்றும் இன்னும் அதே கொலைவெறி தணியவில்லை.

நாடாளுமன்றத்திலேயே பா.ஜ.க. உறுப்பினர் சாக்சி மகராஜ், கோட்சேவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று கூறினார். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு என்பது வெள்ளிடை மலை.

மோடி அரசின் செயல்பாடுகளால்  தமிழகம் எல்லா வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது.

திராவிட இயக்கம் நாட்டுக்கு வழங்கிய கொடை சமூகநீதித் தத்துவத்தைத் தகர்க்கும் வகையில் செயல்படும் பா.ஜ.க. அரசு, உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க சட்டத் திருத்தம் கொண்டுவந்து, இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்து இருக்கிறது.

நீட் நுழைவுத் தேர்வைத் திணித்து பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, பழங்குடி மாணவர்கள் மருத்துவராகும் கனவைத் தகர்த்தது, தமிழ்நாட்டின் உயிராதாரமான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக உரிமைகளைப் பறித்தது மட்டுமின்றி, கர்நாடகம் காவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு அனுமதி அளித்தது.

காவிரி வேளாண்மையை ஒழித்துக்கட்டி, டெல்டா பகுதியை பாலைவன பூமியாக மாற்றிட மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களை மக்கள் எதிர்ப்புக்களை மீறி செயல்படுத்த பா.ஜ.க. அரசு துடிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்துள்ள திட்டம், சொந்த மண்ணிலிருந்து மக்களை வெளியேற்றும் பேரழிவுத் திட்டமாகும்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் வஞ்சகத் திட்டத்துக்கு பா.ஜ.க. அரசு துணைபோனது.

கஜா புயலால் பேரழிவுக்கு உள்ளான காவிரி டெல்டா மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளவோ, உயிரிழந்த நூற்றுக்கு மேற்பட்டோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவோ பிரதமர் மோடி அவர்களுக்கு ஈர இதயமில்லை. வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் சோழவள நாட்டு மக்களின் மீள்வாழ்வுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மோடி அரசு வஞ்சகம் இழைத்துவிட்டது.

சுற்றுச் சூழலுக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முனைந்து இருப்பதும், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் நிறுவத் துடிப்பதும் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை எற்படுத்தும்.

மத்திய பா.ஜ.க. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.

அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூருக்கும், பிப்ரவரி 19 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும்.

இதில் கழகக் கண்மணிகள், தமிழ் உணர்வாளர்கள், பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அமைப்புகள் தமிழகத்தின் எதிர்ப்பைத் தெரிவிக்க பெருமளவில் திரண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 6-2-2019 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மு.சுப்புரத்தினம் அவர்கள் மகன் திருமணத்தில் வைகோ வாழ்த்து!

முன்னாள் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நினைவில் வாழும் வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம் அவர்களின் மகன் இந்திரஜித்_இராஜலெட்சமி ஆகியோர் திருணத்தை நடத்தி வைக்க இன்று 06-02-2019 காலை வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை வரவேற்க சுப்புரத்தினம் அவர்களின் பேத்திகள் வீரத்தாய் வேலுநாச்சியார் மற்றும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் காத்திருந்தார்கள். 

தலைவர் வைகோ வந்ததும் பேத்திகள் தலைவரிடத்தின் அளவளாவினர். தொடர்ந்து திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த மணமக்களின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவோம்!

பிரதமர் மோடி தமிழகம் வரும்போது மதிமுகவினர் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மாநில சுயாட்சி ஒங்குக!

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளிலிருந்து அதிகபடியான உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்ல நேர்ந்தால் மாநில சுயாட்சி மலரும்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மோடிக்கு கறுப்பு கொடி!

பிரதமர் தமிழகம் நுழையும்போது கறுப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

உச்சநீதிமன்றத்தில் வைகோ வாதம்!

ஸ்டெர்லைட்டிற்கு எதிரான வழக்கு நாளையும் தொடர்ந்து 5 ஆவது நாளாக நடைபெறுகிறது, இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்கிறார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

திராவிட ரத்னா!

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் வைகோ.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

வைகோ-ஆதாயம் தேடாத ஆகாயம்!

வைகோ-மதிமுக பொதுச் செயலாளர்.

ஆதாயம் தேடாத ஆகாயம்

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

திராவிட ரத்னா வைகோ!

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் வைகோ.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

வாக்களிப்பீர் பம்பரம் சின்னத்திற்கு!

2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் பம்பரம் சின்னத்திற்கே.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை