Wednesday, February 6, 2019

மு.சுப்புரத்தினம் அவர்கள் மகன் திருமணத்தில் வைகோ வாழ்த்து!

முன்னாள் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நினைவில் வாழும் வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம் அவர்களின் மகன் இந்திரஜித்_இராஜலெட்சமி ஆகியோர் திருணத்தை நடத்தி வைக்க இன்று 06-02-2019 காலை வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை வரவேற்க சுப்புரத்தினம் அவர்களின் பேத்திகள் வீரத்தாய் வேலுநாச்சியார் மற்றும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் காத்திருந்தார்கள். 

தலைவர் வைகோ வந்ததும் பேத்திகள் தலைவரிடத்தின் அளவளாவினர். தொடர்ந்து திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த மணமக்களின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment