Sunday, July 24, 2022

நீர் மற்றும் சுகாதாரத் துறை குறித்த வைகோவின் கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பதில்!

கேள்வி எண்-105

நீர் மற்றும் சுகாதாரத் துறை குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் வைகோ அவர்கள் கீழ்காணும் கேள்விகளை எழுத்து மூலமாக எழுப்பியிருந்தார். அதற்கு 18.07.2022 அன்று நடுவண் இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அவர்கள் பதில் அளித்திருக்கிறார்.
(அ) நீர் ஆதாரத் திட்டம் மீதான தேசிய பயிலரங்கில், அதன் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நீர் வழங்கல் உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றின் மக்களின் உரிமையை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் தேவை.
(இ) கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், நீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமல்லாது, கிராமப் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்கள் மூலம் நீர் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுமா?
(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பதில்:
(அ) முதல் (ஈ): நீர் ஆதாரத் திட்டம் (ஜல் ஜீவன் மிஷன்) தேவைக்கேற்ப விரிவாக்கப்பட்டு, வழிகாட்டு முறைப்படி மக்களைச் சென்றடையும் வகையில், நீர்வளங்கள் உள்கட்டமைப்பின் திட்டத்தைச் செயல்படுத்த, மேலாண்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் மக்களின் பங்களிப்பை வலியுறுத்துகிறது.
தகவல் தொடர்புகள், ஆய்வுக் கூட்டங்கள், தேசிய/மாநில மாநாடுகள், பயிலரங்கங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் களப் பார்வைகள் போன்றவற்றின் மூலம் நீண்ட கால சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பில் மக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மேலும் இது மக்கள் இயக்கமாக உருவாக்க பெரிய அளவில் பொது மக்களை அணிதிரட்டுமாறு வலியுறுத்துகிறது. மேலும், உரிமை மற்றும் உணர்வைக் கொண்டுவர, பொதுமக்கள் பங்களிப்பு வேண்டும்.
இது மலை மற்றும் வனப்பகுதியில் வாழும் 50% க்கும் அதிகமான ஆதிதிராவிட கிராமங்களில் நீர் விநியோக உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவு 5% ஆகும். பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் மற்றும் மீதமுள்ள கிராமங்களில் 10%. திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும்.
திட்டங்கள் நீண்ட காலம் நிலைத்து இருக்கவும், எதிர்பாராத செலவினங்களைச் சந்திக்கவும் சுழல் நிதியாக, கிராமப்புற உள்கட்டமைப்பு செலவில் 10% பொதுமக்கள் சேவைக்கு அளிக்கப்படும். பொதுமக்கள் வைப்புத் தொகை செய்யப்படும் பஞ்சாயத்துகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர் ஆதாரத் திட்டச் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் உள்ளபடி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கிராம பஞ்சாயத்தின் துணைக் குழுவை அமைக்க வேண்டும். அதாவது கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழு (VWSC)/ நீர் ஆதாரக் குழு/ பயனீட்டாளர் குழு போன்றவை பங்கேற்பை உறுதிசெய்ய குறைந்தபட்சம் 50ரூ பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கிராமங்களில் நீர் ஆதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, கிராம பஞ்சாயத்துக்கள், கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நீர் ஆதாரத் திட்டம் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் கிராமப் பஞ்சாயத்து அல்லது அதன் துணைக் குழுவால் செயல்திட்டத்தை (VAP) தயாரிப்பதுடன், செயல்படுத்துதல் ஆதரவு முகமைகள் (ISAS), பொது சுகாதார பொறியியல் / ஊரக நீர் வழங்கல் துறை, மாவட்ட நீர் மற்றும் சுகாதார இயக்கம் (DWSM) ஆகியவற்றின் ஆதரவுடன் அடிப்படைக் கணக்கெடுப்பு, ஆதார வரைபடங்கள் மற்றும் கிராம மக்களின் தேவைகளை உணர்ந்தது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், பல்வேறு கட்டங்களில் கிராம செயல் திட்டங்களை தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பல்வேறு நிலைகளில் நடைபெற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனான நீர் ஆதாரக் குழுவின் ஆய்வுக் கூட்டங்களின் போது, கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழு, நீர் ஆதாரக் குழு உருவாக்குவதில் ஏற்பட்ட முன்னேற்றம், கிராம செயல் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவையும் இந்தத் துறையால் கண்காணிக்கப்படுகின்றன. 13.07.2022 அன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட 6,01,463 கிராமங்களில், 5,02,414 கிராமங்களில் கிராம பஞ்சாயத்து துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு 4,56,946 கிராம செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2022

No comments:

Post a Comment