Saturday, July 23, 2022

உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய வாக்களித்ததா? வைகோ கேள்வி அமைச்சர் பதில்!

கேள்வி எண்.537

(அ) ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனில் செய்த கடுமையான உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் விசாரணை நடத்தும் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களித்ததா?
(ஆ) இல்லையெனில், வாக்களிப்பதில் இருந்து விலகுவதற்கு இந்தியா தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் என்ன? சித்திரவதை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அடக்குமுறை, நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட மரணதண்டனை போன்ற மனித உரிமை மீறல்களில் உண்மையைக் கண்டறிவதற்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டதா?
(இ) ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் தூதரக முயற்சிகள் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தை மூலம் இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன?
மேற்கண்ட வைகோ அவர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் 21.07.2022 அன்று அளித்த பதில்:
(அ) ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 49 ஆவது அமர்வு, மார்ச் 2022 இல் நடைபெற்றது. அதில், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அவசரமாக நிறுவுவதற்கு வாக்கெடுப்பு மூலம் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள், தொடர்புடைய குற்றங்கள், துஷ்பிரயோகங்களின் உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான மூல காரணங்கள் குறிப்பாக தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து அதை உறுதிப் படுத்துதல் அடங்கிய தீர்மானம்.
(ஆ) & (இ) எங்கள் கொள்கையின் பார்வையிலும், இராஜதந்திர நடவடிக்கை மற்றும் அங்கு நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் இந்தியா தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.
உக்ரைனில் மோதல்கள் தொடங்கியதில் இருந்தே, உடனடியாக சண்டை நிறுத்தம், வன்முறையை நிறுத்தம் வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. உக்ரைன் பிரதமர் மற்றும் ரஷ்யாவின் அதிபருடன் பலமுறை பேசி, இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து உள்ளது.
பேச்சுவார்த்தையின் மூலம் சமாதான பாதைக்குத் திரும்புமாறு இரு தரப்பினருக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக, மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர் அவர்களால் மார்ச் 15, 2022 மற்றும் ஏப்ரல் 06, 2022 அன்று நாடாளுமன்றத்தில் முறையே இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
23.07.2022

No comments:

Post a Comment