Monday, November 6, 2023

மது விலக்கு போராளி அன்னை மாரியம்மாள் 8 ஆம் ஆண்டு புகழஞ்சலி!

தமிழ்நாடு முழுவதும் 2015 ஆம் ஆண்டு மதுவிலக்கு போராட்டம் தீவரமடைய முதல் தீப்பொறியை கலிங்கபட்டியில் பற்ற வைத்தவரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்களை பெற்றெடுத்த தாயாகிய அன்னை மாரியம்மாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் குமரி மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகர கழகத்தில் சார்பில் 6-11-2023 மாலை அனுசரிக்க பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்களும் மாநகர செயலாளர் மரியாதைக்குரிய ஜெரோம் ஜெயக்குமார அவர்களும், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியை ராணி செல்வின் அவர்களும், அகாஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் பெரியவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அன்னைக்கு நினைவஞ்சலி செலுத்தினர்..


No comments:

Post a Comment