கடந்த இரண்டு நாட்களாக கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஈரோடு நாடாளுமன்ற தொகுதி MP கணேசமூர்த்தி அவர்கள்இன்று 28-03-24 இன்று அதிகாலை 5.50 மணி அளவில் மரணமடைந்தார்.
நம்மை விட்டு மறைந்த அண்ணன் திரு கணேசமூர்த்தி எம்பி அவர்களின் திரு உடல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பொது மருத்துவமனையில் உடற் கூறாய்விற்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் மலர் வைத்து மரியாதை செலுத்தி கலங்கினார். கணேசமூர்த்தி அவர்கள் மகன் கபிலனுக்கு ஆறுதல் கூறினார். உடன் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, அவைத் தலைவர் அர்ஜுனராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.
தொடர்ந்து அவரது உடல் ஊர்வலாக எடுத்து வரப்பட்டு அவரது தோட்டத்திலே தகனம் செய்யப்பட்டது. இதில் பல அரசியல் தலைவர்கள், ஏராளமான கழக கண்மணிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment