Sunday, May 26, 2024

குமரி வெற்றிவேல் இல்ல மணவிழாவில் துரை வைகோ வாழ்த்து!

நாகர்கோவில் நகரில் எழுச்சிமிகு ஏற்பாட்டில் நடைபெற்ற குமரி மாவட்ட கழக செயலாளர், மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். வெற்றிவேல் அவர்களின் மகள் அபிசேகா MA Ph.D - அருண் பிரவீன் BE இணையர் திருமணம் இன்று 26-05-2024 காலை 10 மணி அளவில் நாகர்கோவில் எம் டி பி அரங்கில் நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வர இயலாத காரணத்தால், மணவிழாவிற்கு தலைமையேற்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில் சாமிதோப்பு வைகுண்டபதி பால பிரஜாபதி அடிகளார், மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், அமைச்சர் மனோ தங்கராஜ், டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ,
திமுக மகளிர் அணி மாநிலச்செயலாளர் ஹெலன் டேவிட்சன்; தி.மு.க. அமைப்பு துணைச் செயலாளர், முன்னாள் எம்பி ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. எம்.சி. பாலன், முன்னாள் எம்.பி. பெல்லார் மின் , மதிமுக மாவட்ட செயலாளர்கள் என். செல்வராகவன், டிடிசி சேரன், சுதா பாலசுப்பிரமணியன் மற்றும் தென்றல் நிசார், சிவகாசி குமரேசன் நெல்லை கல்லத்தியான் நெல்லை ஷேக் முகமது நிஜாம் , குமரி மாவட்ட மாநில நிர்வாகிகள்
இராணி செல்வின், எம்.ஆர்.ராஜ்குமார், சுமேஷ் மாநகரச் செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார், மாவட்டக் கழக நிர்வாகிகள் உட்பட திரளான நிர்வாகிகள், முன்னணி தொழிலதிபர்கள், உறவினர்கள், திரளான பெருமக்கள் அனைத்துக் கட்சியினர், அரசு பணியாளர்கள் என பெருந்திரளாகப் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமண நிகழ்வை மதிமுக துணை பொதுச் செயலாளர் திமு ராஜேந்திரன் தொகுத்து வழங்க மணமகளின் தந்தை வழக்கறிஞர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
திருமண நிகழ்விற்கு தோவாளை வரவேற்பு தொடங்கி 10 கிமீ தூரம் கொடிகள், சுவரொட்டிகள், பிள்க்ஸ் போர்டுகள் அமைக்கப்பட்டு நாகர்கோவில்
நகரமே திருவிழாக் கோலம் கண்டிருந்தது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment