தமிழ் நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், புது தில்லி என பல மாநிலங்களிலும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுத்து வைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைத் தொடர்ந்து சிதைத்து வரும் நிலையில், இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திமுக வரவேற்கிறது. பாராட்டுகிறது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நிர்வாகிகள் இப்போராட்டத்தினை ஆதரித்து உரையாற்றுவார்கள்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
06.02.2024

No comments:
Post a Comment