Saturday, July 18, 2020

தமிழர் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகிகள் கூட்டம்!


வளைகுடா மற்றும் சிங்கபூரில் இயங்கி வரும் தமிழர் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று 17-07-2020 இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகளான, செயலாளர்கள், அவைத் தலைவர், பொருளாளர் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

கழக பொதுச் செயலாளர் அன்புத் தலைவர் வைகோ MP அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு இறுதியுரை நிகழ்த்தினார். துணைபொதுச் செயலாளர் மல்லை.சி..சத்யா, மகளிர் அணி செயலாளர் அக்கா மருத்துவர் ரொஹையா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
.
கழக பணிகள் கொரொனா காலத்திலும் தொய்வின்றி நடைபெறும்விதமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம், மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் என இணையவழி கூட்டங்களை நடத்தி வருகிறார் அன்பு தலைவர் வைகோ அவர்கள்.

இணையத்திற்கும் அங்கிகாரம் வழங்கும்விதமாக, கழக துணை நிலை அமைப்பான தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் நேற்றைய zoom செயலி மூலமான இணைய கூட்டத்தில் பஹ்ரைன், அமீரகம், சிங்கப்பூர், குவைத், கத்தார், ஓமான், சவூதி உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் அமைப்புகளின் செயலாளர், பொருளாளர், அவைத்தலைவர் உள்ளிட்ட 42 பேர் பங்கேற்றார்கள்.

தாங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள அமைப்புகளின் பணிகளை செயலாளர்கள் விளக்கி உரையாற்றினார்கள். நிகழ்வில் நிறைவாக கழக பொதுச் செயலாளர் அவர்கள் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் பணிகளை பாராட்டி உரையாற்றியது அவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்திருக்கிறது.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பாக ஓமானில் கழகம் செய்த பணிகளை எடுத்துரைத்தும், எதிர்கால செயல்திட்டம் பற்றியும், மதிமுக மாநாடு பற்றியும், தலைவர் ட்விட்டர் வலைதளத்தில் இணையவேண்டுமென்று கூறியும், ஒமான் சலாலாவில் பாதிக்கப்பட்ட 2 தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் நாடு திரும்புவார்கள் எனவும் தலைவரிடத்தில் கூறி சிற்றுரை நிகழ்த்தினேன். அன்புத் தலைவர் வைகோ அவர்கள், வெகுவாக பாராட்டி, கழக துணை நிலை அமைப்பின் பெயரை சரியாக கேட்டு தமிழர் மறுமலர்ச்சி பேரவை என எழுதி 2017 ல் துபாயில் வைத்து சொல்லிய பெயரை சரிபார்த்துக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் வளைகுடா அமைப்புகளைன் சார்பாக, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

1. கொரோனா நோயினால் வாழ்விழந்து தவிக்கும் ஏழை மக்களின் துயர் துடைக்க நாள்தோறும் வீதியிலிறங்கி தன்னலம் கருதாது நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவர் வைகோ அவர்கள் குறிப்பிடுவது போல செஞ்சிலுவை சங்கமாக இயங்கி மாற்றாரும் வியக்கும் வண்ணம் இயக்கத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு கழக கண்மணிகளுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது.

2. சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் , பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரட்டை கொலை வழக்கை சி.பி.சி..டி. விசாரித்து
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் இந்த லாக்-அப் படுகொலை வழக்கை விசாரணை நடத்தி வரும் சி.பி.சி..டி. .ஜி. சங்கர் மற்றும் சி.பி.சி..டி. காவல்துறை அதிகாரிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிப்பதுடன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

3. வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் விமான சேவை போதுமானதாக இல்லை கத்தார், சவூதி, அமீரகம் போன்ற வளைகுடா
நாடுகளில் சுமார் எட்டாயிரம் தமிழர்கள் வேலையிழந்து ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களை விமான கட்டணமின்றி தமிழகம் அழைத்து வர வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கோரிக்கை வைத்து உலக தமிழர்களின் குரலாக வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள் , இந்த விசயத்தில் மெத்தனம் காட்டாமல் தமிழக அரசும் இந்திய அரசும் உடனே துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு கைது
செய்யப்பட்டவர்கள்
சென்னை மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு, சென்னை மாநகருக்குள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சொந்தப் பிணையில் இவர்களை விடுவிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டன.
ஆனால், இவ்வாறு பிணை வழங்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலிருந்து மீண்டும் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
விசா விதிமுறை மீறலுக்காக போதுமான தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்கள் வழக்கை முடித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதன் பின்னரும் இந்த வெளிநாட்டினரை கொரோனா பரவியுள்ள புழல் சிறையில் அடைத்து வைத்த எடப்பாடி அரசு நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறி உள்ளது என்று தலைவர் வைகோ கண்டனத்தை பதிவு செய்தார்கள் .
தொடர்ந்து தலைவர் வைகோ அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டவாறு வெளிநாட்டு பயணிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு
தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் . தலைவர் வைகோ அவர்களின் இந்த
மனிதநேய பணிக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிக்கிறது.

5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
தற்போது பா... அரசு தேர்தல் நடத்தும் விதிமுறை 2019 மற்றும் தேர்தல் நடத்தும் விதிமுறை 2020 ஆகியவற்றை சட்டதிருத்தமாக கொண்டுவந்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80 லிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி தராது . அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்வதற்கு வயது வரம்பை 65 என்று குறைத்து இருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். எனவே மத்திய அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திகிறது.

6.கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அண்மைக் காலமாக .தி.மு.. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment