Monday, July 6, 2020

வெளிநாட்டு தமிழர்களை தாயகம் மீட்டு வரவும், தமிழர் நலன் காக்க தனி அமைச்சகம் உருவாக்கவும், போராட்டம் நடத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற வைகோ.எம்பி அவர்களுக்கு ஒமான் தமிழர்கள் நன்றி அறிவிப்பு!


ஜூன் 2020 இறுதியில், வைகோ.எம்பி அவர்களுக்கு ஓமானில் அநேக தொழிலாளர்கள், வேலை இழந்தும், மருத்துவத்திற்காகவும், குடும்ப சூழலாலும், சொந்த ஊர் செல்ல வானூர்தி இல்லாததால் அவதியுற்றனர்.

வந்தே பாரத் திட்டம் மூலம் வானூர்தி இல்லாமலும், தன்னார்வலர்கள் மூலம் அரிதாக ஏற்பாடு செய்யப்படும் சாட்டார்டு வானூர்திகளுக்கு கூட, கடைசி நேரங்களில், பல நிபந்தனைகளை விதித்து, வானூர்திகள் ரத்தாகும் நிலைக்கு தள்ளியது தமிழக அரசு.

ஊருக்கு செல்ல பயண சீட்டு எடுத்தபின்னர் விமானத்திற்காக, நூற்றுக்கணக்கான கிமீ தொலைவிலுள்ள மக்கள் முந்தின நாள் இரவே விமான நிலையம் வந்து, பின்னரே விமானங்கள் ரத்து செய்ததை அறிந்து திரும்பி செல்ல இயலாமலும், அதில் பல கர்பிணி பெண்கள். வானூர்தி ரத்தாததால் மஸ்கட்டிலே தங்க வசதியில்லாமல் அவதியுற்றதையும் தெரியப்படுத்தியிருந்தோம்.

ஆகவே தமிழக அரசு இந்திய அரசு விமானங்களை அதிகமாக இயக்க அனுமதி வழங்க வேண்டுமென்றும், தனியார் சாட்டர் விமானங்களையும் எந்த நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதித்து ஏழை தொழிலாளர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு தலைவர் வைகோ.எம்பி அவர்கள் அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களை மீட்டு தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுமாறு ஒமான்  தமிழர்கள் சார்பாக வேண்டுகோள் வைத்திருந்தோம்.

தலைவர் வைகோ அவர்கள் ஒமான்  தமிழர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, பாதிப்புகளை அறிந்து உணர்ந்து ஒமான்  மட்டுமல்லாது மற்ற வளைகுடா நாடுகளிலும் இதே போல மக்கள் சிரமப்டுவதை தகவகல் சேகரித்து வெளிநாட்டு தமிழர்களை உடனே தாயகம் கொண்டு வர வேண்டுமென்று நேற்று 05-07-2020 போராட்டத்தில் ஈடுபட்டதோடு அனைத்து மக்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை உடனடியாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வைகோ.எம்பி வலியுறுத்தியுளார்.

கொரொனா கோவிட் 19 தொற்றின் மத்தியிலும் சாமானியர்களுக்காக சமூக இடைவெளியுடன் பதாகைகளை ஏந்தி வெளிநாட்டு தமிழர்களை மீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தியதன் மூலம் என்றுமே சாமானியர்களுக்காகவும், நாதியற்றவர்களுக்காகவும், திக்கற்றவர்களின் துயர கண்ணீர் துடைக்கும் தலைவராகவும் வைகோ எம்பி அவர்கள் விளங்குகிறார்.

வைகோ.எம்பி அவர்கள் என்றுமே சாமானியனின் தேவைகளை அறிந்து செவை செய்பவராகவே விளங்குவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். தமிழர்கள் எங்கெல்லாம் துயரப்படுகிறார்களோ வைகோ .எம்பி அவர்களின் குரல்தான் முதலில் ஒலிக்கிறதை அறிகிறோம். தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்த தலைவர் வைகோ.எம்பி அவர்களுக்கு ஒமான்  தமிழர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
06-07-2020

No comments:

Post a Comment