Monday, September 14, 2020

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கவேல் மறைவு. வைகோ இரங்கல்!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தளகர்த்தர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.தங்கவேல் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன்.

நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தவர் அவர். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தவர் அவர். அனைத்துக் கட்சியினரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர்.

திருப்பூர், கோவை உள்ளிட்ட பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், தமிழ்நாட்டின் பொதுவாழ்வுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.09.2020

No comments:

Post a Comment