Wednesday, September 30, 2020

குமரி மாவட்ட முதல் பெண் IPS செல்வி பிரவீணா அவர்களுக்கு வைகோ‌ எம்பி அலைபேசியில் வாழ்த்து! குமரி மாவட்ட மதிமுக நேரில் வாழ்த்து!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோ எம்பி அவர்களின் சார்பாக 

IPS தேர்வில்  வெற்றிப்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தின்  முதல் பெண்மணி  #செல்வி_பிரவீணா அவர்களை, இன்று இல்லத்தில் சென்று சந்தித்து  நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும், தென் குமரி கல்வி கழக செயலாளரும், குமரி  மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் S வெற்றிவேல் அவர்கள் சால்வை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

குமரி மதிமுக மாவட்ட துணை செயலாளர் கொற்றியோடு சுரேஷ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பள்ளியாடி குமார்‌ உள்ளிட்ட குமரி மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

மேலும் தமிழர்களின் தாயகம் வைகோஅவர்கள் #செல்வி_பிரவீணா அவர்களிடம் அலைப்பேசியில் வாழ்த்து  கூறினார்கள்.

No comments:

Post a Comment