Tuesday, September 14, 2021

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 15.09.2021 புதன்கிழமை காலை 9 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.

மாலை 3 மணிக்கு காணொளி வழியாக அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். கழக முன்னணியினர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்
சென்னை - 8
14.09.2021

No comments:

Post a Comment