Tuesday, November 2, 2021

உரம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிவேக நடவடிக்கை!

தற்போது வட கிழக்கு பருவ மழையை நம்பி அனைத்து பகுதிகளிலும் வேளாண் பணிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக தென் மாவட்டங்களில் மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, வாழை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகமெங்கும் பரவலாக கடும் உரம் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி  உள்ள நிலையில், இதை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தேவையான அளவு உரம் உடனடியாகக் கிடைக்கக் கேட்டுக் கொண்டேன்.

அதன் காரணமாக தென்காசி மாவட்டத்திற்கு முதல் தவணையாக 120 டன் யூரியா உரம் ஒதுக்கீடு கிடைத்தது. அதில் கலிங்கப்பட்டி, செவல்குளம், மைப்பாறை ஆகிய ஊர்களில் உள்ள தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு தலா 20 டன் என்று பகிர்ந்து தரப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டாவது தவணையாக இன்னும் 120 டன் யூரியா உரம் கிடைக்க அதிகாரிகளிடம் பேசி உள்ளேன்.

விரைவில்  குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட சாயமலை வலசை, சிதம்பராபுரம், உடன்குளம். ஆலங்குளம், மகேந்திரவாடி, குருவிகுளம், அழகனேரி, திருவேங்கடம் கூட்டுறவு சங்கங்களுக்கும் விரைவில் பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

அன்புடன்...
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
02.11.2021

No comments:

Post a Comment