Saturday, October 8, 2022

மிலாது நபி திருநாள். வைகோ வாழ்த்து!

நாம் அனைவருமே சகோதரர்கள்; நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் கூடாது என முழங்கி, மனிதகுல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலைநாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவை, உலகெங்கும் வாழும் இசுலாமிய பெருமக்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர்.


என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையில் இருந்து துளி அளவும் மாற மாட்டேன் என உறுதியுடன் போராடியவர் நபிகள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபிகளின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி கண்டார்.


அத்தகைய மாமனிதரான நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.


இசுலாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

08.10.2022

No comments:

Post a Comment