Sunday, May 21, 2023

மே17 இயக்கம் நடத்திய ஈழத்தமிழர் நினைவேந்தலில் வைகோ MP பங்கேற்பு!

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் 2009 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "மே 17 இயக்கம்" சார்பாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று 21-05-23 ஒருங்கிணைத்த 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்வில் ஈழத் தமிழர்களின் பாதுகவலர், தமிழினக் காவலர் அன்புத் தலைவர்
வைகோ MP அவர்கள் பங்கேற்று சுடர் ஏந்தி மலர் அஞ்சலி செலுத்தினார். இதில் மே17 இயக்கத்தினர், மதிமுகவினர், மற்றும் தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு இனப்படுகொலைக்கு எதிராக முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment