Wednesday, May 17, 2023

தாயகத்தில் வைகோ MP தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் இன்று 17-05-2023 புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் நடந்தது.

தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் ஈழம் மலர உறுதி ஏற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, தோழர் தியாகு, திரு.புகழேந்தி தங்கராஜ், தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழக முன்னோடிகள், கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment