Friday, May 19, 2023

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் கூட்டம்!

சிங்கள அரசால், இராணுவத்தால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலும், 2009 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையே உறுதிப்படுத்தியது.


ஈழத்தமிழர் படுகொலையைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தீக்குளித்து மாண்டனர். மே -17 இயக்கம் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் 14 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


இதில் நானும் பங்கேற்கிறேன். ஈழத்தமிழ் உணர்வாளர்களும், மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்களும் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

19.05.2023

No comments:

Post a Comment