Tuesday, July 25, 2023

இயக்கத்தின் மூத்த தோழருக்கு உதவிய துரை வைகோ!

கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர் ஜெயராமன்.

என்பது வயதை கடந்து இருந்தாலும் நமது இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்களின் மீது கொண்ட பற்று காரணமாக தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு கொள்வார்.
அரசுப் பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையிலும் 2006 முதல் இன்று வரையிலும் மாதந்தோறும் கழக வளர்ச்சிக்காக 100 ரூபாயை வழங்கி முறைப்படி அதற்கான ரசீதையும் பெற்று கொள்பவர்.
தலைவர் வைகோ அவர்களை சந்திக்க முடியாத மாதங்களில் அதனையும் சேர்த்து அடுத்த மாதங்களில் தவறாமல் இன்று வரை வழங்கி வருகிறார்.
கடந்த மாதம் 29 ம் தேதி என்னையும் தலைவர் அவர்களையும் சந்தித்து அவரது மகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பணியில் இருப்பதாகவும், சில காரணங்களால் அவரால் அங்கு பணிக்கு செல்ல முடியவில்லை என்றும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கிருந்து பணி மாறுதல் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நான் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தாலும், அதற்கு முன்னதாக தலைவர் வைகோ அவர்களிடமும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடமும் பேசி ஒப்புதல் பெற்று விட்டு தற்போது நான் வெளிநாட்டில் இருந்து கொண்டே இது தொடர்பாக தொடர்ந்து அமைச்சர் அவர்களிடம் பேசி அதற்கான பணி மாறுதல் ஆணையை பெற்று கொடுத்து விட்டேன்.
இத்தனை ஆண்டு காலம் மாமனிதன் வைகோ அவர்கள் காட்டிய திசையில் தடம் பிறழாமல் பயணம் செய்து கருப்பு துண்டை எந்நேரமும் தாங்கி பிடிக்கும் கொள்கை குணம் கொண்ட தொண்டரின் குடும்பத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்து கொடுத்ததில் மனநிறைவு அடைகிறேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
25.07.2023.

No comments:

Post a Comment