Tuesday, June 25, 2024

மக்களவை உறுப்பினராக பொறுபேற்றிருக்கிறேன் - துரை வைகோ MP!

இந்திய மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "துரை வைகோ" எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகின்றேன்.

வாழ்க சமூகநீதி அரசியல்..!
வாழ்க சமத்துவம்..!
வாழ்க மதசார்பின்மை..!
பரவட்டும் மனிதநேயம்..!
எனக்கூறி பதவியேற்றார் மதிமுக முதன்மை செயலாளர் அண்ணன் துரைவைகோ.

No comments:

Post a Comment