Monday, May 28, 2018

சமூக வலைதளங்களில் அவதூறு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார்!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் சீமானின் தம்பி, ஆர்.சௌந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேர், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

‘பல்வேறு தலைவர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றனர் என, தந்தி டி.வி, புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தி வெளியிட்டதுபோல ஒரு காட்சிப் படத்தை, இவர்களே போலியாக வரைந்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்கள். அந்தப் பட்டியலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பெயரும் இடம் பெற்று உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு அறப்போராட்டங்கள், பேரணி, நீதிமன்றப் போராட்டம் என்று இன்றுவரை தொடர்ந்து போராடி வருகின்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் குறித்து, பொய்யான, அவதூறான, நன்மதிப்பைக் கெடுக்கின்ற வகையிலான செய்திகளை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்கள் மனதில் வைகோ அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்ற வகையில் பரப்பி வருகின்றார்கள்.

மேற்கண்ட இருவர் மீதும், இவர்களைப் போல, சமூக வலைதளங்களில் போலியான  செய்திகளை வெளியிடுபவர்கள் மீதும், குற்றத் தடுப்புச் சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சார்பில் கழக வழக்கறிஞர்கள் நன்மாறன், பிரியகுமார், செந்தில்செல்வன், வினோத்குமார் ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர் என மதிமுக தலைமை நிலையம்‌ தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 28.05.2018 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment