Saturday, March 30, 2019

நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய ஈரோடு நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர்!

ஈரோடு நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன் மொடக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசுகையில்,
நான் ஏற்கனவே எம்.பி.யாக இருந்தபோது தொகுதி முழுக்க பள்ளிக் கட்டடங்கள் உள்பட பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கியிருக்கிறேன்.
ஆனால் அந்த ஒப்பந்தக்காரரைக் கூட நான் பார்த்ததில்லை...
எதையும் எதிர்பார்த்ததில்லை...
என அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அது நூறு சதவீதம் உண்மை என்றபோது, நா தழுதழுத்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் கண்ணீர் சிந்தி மைக்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் தந்து நீங்கள் பேசுங்கள் என உருகினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ அவர்கள், உண்மைத் தொண்டனுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது என அவரைப் பாராட்டிப் பேசினார்...
இதுதான் மதிமுகவின் தரம். மக்களே அவரை விட்டுவிடாதீர்கள். உங்கள் தொகுதியை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment