Saturday, January 11, 2020

ஓமன் சுல்தான் கபூஸ் மறைவுக்கு வைகோ இரங்கல்!

கடந்த 49 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பு வகித்த, சுல்தான் கபூஸ் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். இந்தியாவில் படித்தவர், இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்களின் மாணவர். எனவே, இந்தியாவின் மீது மதிப்பும், இந்தியர்கள் மீது நல்லெண்ணமும் கொண்டவர். அதனால், ஓமன் நாட்டில் இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தார். குறிப்பாகத் தமிழர்களும் பெருமளவில் பணி ஆற்றி வருகின்றனர்.

வளைகுடாவில் மட்டும் அல்ல, உலக அமைதிக்காகவும் பாடுபட்டவர். ஓமன் எல்லோருக்கும் நண்பன் எனவே, ஓமனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பது இவரது கொள்கை. அதனால், உலகின் சிறந்த மன்னர் ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளுள் ஒன்று என, ஓமன் நற்பெயர் ஈட்டக் காரணமாக இருந்தார். ஓமன் நாட்டு மக்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று இருந்தார்.

அவரது மறைவால், ஓமன் நாட்டு மக்கள் பெருந்துயர் அடைந்து உள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சுல்தான் கபூஸ் அவர்களின் மறைவுக்கு, என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் 11-01-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment