Wednesday, January 8, 2020

உரிமை காக்க மதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு!

அனைவருக்கும் வேலை வழங்கு, விலைவாசியைக் கட்டுப்படுத்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்கு, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு, இரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்காதே, தொழிலாளர் நலச் சட்டங்களை - தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகளின் ஆதரவுச் சட்டங்களாக மாற்றாதே! விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கொடு, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய் ஆகிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO) சார்பில் இன்று 2020 ஜனவரி 8  ஆம் நாள் நடைபெற்ற தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மறுமலர்ச்சி திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் முகவை இரா.சங்கர், ஈகை சிவா, இராசராச சோழன், ஜெயவேல், கதிரவன், அருண்குமார்,தனசேகர் மற்றும் மாணவரணியினர் மதிமுக மாணவரணி சார்பில் கலந்து கொண்டு கைதானார்கள்.

No comments:

Post a Comment