Friday, November 20, 2020

தாயகத்தில் நீதிக்கட்சியின் 104 ஆம் ஆண்டு தொடக்க விழா!

நீதிக்கட்சியின் 104 ஆவது தொடக்க நாளை முன்னிட்டு 20.11.2020 காலை 11 மணிக்கு தாயகத்தில் நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களான டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் தலைமையிலும், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் ப.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் நீதிக்கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், இலக்கிய அணித் துணைச் செயலாளர் காட்வின் அஜூ, மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர், வெளியீட்டு அணித் துணைச் செயலாளர் விக்டர் எபிநேசர், தென்சென்னை மாவட்ட அவைத்தலைவர் க.இளவழகன், பகுதிக் கழகச் செயலாளர்கள் தென்றல் நிசார், சு.செல்வபாண்டியன், பா.டில்லிபாபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் அப்பன்துரை, வட்டச் செயலாளர் பிரேம், செல்வநாயகம், மனோகரன் முதலானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’ 
சென்னை - 8 
20.11.2020

No comments:

Post a Comment