Wednesday, June 28, 2023

தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக திருச்சியில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார் முதன்மை செயலாளர் துரை வைகோ!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி, ஒரு கோடிக்கு மேலான கையெழுத்து இயக்கம் திருச்சியில் இன்று 28.06.2023 காலை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் தொடங்கி தெப்பக்குளம், பிஷப்ஷூபர் மேல்நிலைப்பள்ளி வரை நடை பயணமாக கழக தோழர்களோடு நடந்து சென்றும், திருச்சி மாநகர பேருந்தில் பயணித்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்தித்து ஆளுநரின் அடவாடித்தனத்தையும், தான் சார்ந்த கட்சியின் சனாதனத்தை பரப்பும் பிரச்சார பிரசங்கியை போல் அத்துமீறி செயல்படுவது குறித்தும் அனைவரிடமும் விளக்கி கையெழுத்தினை பெற்றார்.

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா சேக்முகமது, மாவட்ட செயலாளர்களான வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன் உள்ளிட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் கழக கண்மணிகள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment