Monday, January 29, 2024

ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு தாயகத்தில் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்-துரை வைகோ பங்கேற்பு!

தமிழீழ படுகொலையை கண்டித்து தமது இன்னுயிரை ஈந்த தியாகிகளை நினைவு கூறும் விதமாக நேற்று (29.01.2024) மாலை தலைமை அலுவலகம் தாயகத்தில் தியாகிகள் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, வீர முழக்கமிட்டு தனி ஈழம் அமைய சூளுரை மேற்கொள்ளப்பட்டது.

லட்சியங்கள் சாவதில்லை..!
கொள்கைகள் மறைவதில்லை..!
அவற்றை என்றும் அழியாமல் இலக்கியமாக ஆக்கித்தருபவர்கள் தியாகிகள். அவர்கள் தான் அதை வாழ வைக்கிறார்கள்..
எதிர்கால தலைமுறையை தலை நிமிர வைக்கிறார்கள்..!
என்றும்,
ஈழ உறவுகள் உரிமைகளைப் பெற வேண்டும்..
தன்மானத்துடன் வாழ வேண்டும்..
ஈழம் அமைய வேண்டும்..

என்று நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டு கழக முதன்மை செயலாளர் துரை வகோ உரை நிகழ்த்தினார்.

முன்னதாக கழகப் பொருளாளர் மு. செந்திலதிபன், தமிழர் தேசிய இயக்கத்தின் செயலாளர் தோழர் தியாகு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இனமான இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், கழக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி இரா.அந்தரி தாஸ், கழக தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன் ஆகியோரும் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள், மாநில ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் கழக கண்மணிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment