Wednesday, January 24, 2024

சாத்தூர் 'எஸ்.ஆர்.நாயுடு' கல்லூரி பொன் விழாவில் வைகோ MP மற்றும் வெங்கையா நாயுடு பங்கேற்பு!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சடையம்பட்டியில் அமைந்துள்ள திரு எஸ். இராமசாமி நாயுடு நினைவுக் கல்லுரியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா இன்று (24.01.2024) நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் முன்னாள் இந்தியக் குடியரசுத் தல்துணைத் தலைவர் உயர்திரு வெங்கையா நாயுடு அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ MP அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்கள். 

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் உயர்திரு கணேஷ்ராம், தலைவர் உயர்திரு பெருமாள்சாமி, செயலாளர் உயர்திரு ஜெகதீசன் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மருத்துவர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் தி.மு.இராசேந்திரன் அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும், தோழர்களும், மாணவ, மாணவியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment