Sunday, January 21, 2024

தலைவை வைகோ MP அவர்களுக்கு 'தமிழ்நாட்டின் உரிமைக்குரல்' விருது!


Blacksheep மீடியா சார்பில், குரலின் ஆளுமைகள் என்றத் தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி 20.01.2024, சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னை காரமாரசர் அரங்கத்தில் நடைபெற்றது.
தலைவர் வைகோ MP, கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட அரசியல் மற்றும் கலைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய குரல் ஆளுமைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தமிழக வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகவும் கடந்த அறுபது ஆண்டுகளாக ஓய்வின்றி போராடி வருகின்ற களப்போராளித் தலைவர் வைகோ MP அவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் அங்கீகரிக்கும் வகையில் Blacksheep Media சார்பில் 'தமிழ்நாட்டின் உரிமைக்குரல்' என்ற விருது கொடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment