Saturday, February 3, 2024

அண்ணா நினைவு நாளில் மதிமுக அமைதி ஊர்வலம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு நாள் 03-02-2024 ல் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், திருவல்லிக்கேணி D1 காவல் நிலையம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் சென்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர்கள் மலை சத்யா, செஞ்சி ஏ கே மணி, தி மு ராஜேந்திரன், டாக்டர் ரொகையா, உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆவடி அந்தரிதாஸ், அ.கணேசமூர்த்தி எம்.பி., மு.பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கழக செயலாளர்கள் சு ஜீவன், டி சி ராஜேந்திரன், கே கழககுமார், சைதை ப சுப்பிரமணி, நெமிலிச்சேரி பாபு, மாவை மகேந்திரன், சூரியகுமார், கருணாகரன், ஜெய்சங்கர், பார்த்திபன், ராமதாஸ், மார்நாடு அணிகளின் செயலாளர் ப த ஆசைதம்பி, பால சசிகுமார், ஆ பாஸ்கரசேதுபதி, சுமேஷ், மல்லிகா தயாளன், வி சேஷன், ஜே சிக்கந்தர், ஹேமநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment