Monday, July 15, 2019

வாழ்த்து தெரிவித்த லயோலா மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள்!

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று 15-07-2019 மதிமுக தலைமை நிலையம் தாயகத்திற்கு வருகை தந்து நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வைகோ அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

தொடர்ந்து மாணவர்களை அழைத்து சென்று கூட்ட அரங்கில் வைத்து தனது மாணவ பருவங்களை எடுத்து கூறி அறிவுரைகளையும் வழங்கினார். 

அப்போது தலைவர் வைகோ அவர்கள் மாணவர்களிடம் கூறியன சில கீழே!

1. அப்பா அம்மாவிடம் பிரியமாக இருங்கள். அவர்கள் உங்கள் பாசத்திற்காக ஏங்குகிறார்கள். உங்கள் பாசம் கிடைக்காததால் அவர் மனதில் ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது என மாணவர்களிடம் வேண்டுகோள்.

2. காதல் விஷயத்தில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பருவகால மாற்றங்கள் சமூக குற்றத்திற்கு காரணமாகி விடுகிறது. கவனம் தேவை.


3. மொழியை பற்றி இனத்தை பற்றிய உணர்வு மாணவர்களிடம் வேண்டும்.


4. புரட்சி வெடிப்பது நம் மரபு அணுக்களில் உள்ளது. அழிவு சக்தி வரும் போது மாணவர்கள் சக்தி எழும்.

No comments:

Post a Comment