Friday, July 26, 2019

ஒமான் மதிமுக ஆலோசனை கூட்டம்!

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 26-07-2019 அன்று மாலை 3 மணி அளவில் மஸ்கட் ருசைல் பார்க்கில் நடந்தது.

பாலசுப்ரமணியம் அவர்கள் வரவேற்றார்கள், துணைச் செயலாளர் வரதராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றம் சென்றதற்கு இனிப்பு உண்டு கொண்டாடினார்கள்.

கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய மக்கள் பணிகளான, பல மக்களுக்கு வேலை வாங்கி தந்து அவர்கள் பொருளாதாரம் முன்னேற செய்தது, பல மக்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தது, பாலம், ரோடு போட்டு தந்தது, NLC உள்ளிட்ட அரசு நிறுவனங்களை காத்தது, மக்களுக்கு எதிரான திட்டங்களை தனி ஆளாக தடுத்து நிறுத்தியது போன்ற ஆக்க பணிகள் விவாதிக்கப்பட்டது. மேலும் ஒமான் கழக அமைப்பை எவ்வாறு வலுப்பெற செய்வது, புதிய வாழ்நாள் உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும், சென்னையில் நடைபெறவிருக்கும் அண்ணா பிறந்த நாள் விழா செப் 15 மாநாட்டிற்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை பங்களிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தீர்மானம்:

1. இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கு மேலவை உறுப்பினராக பதவியேற்று மக்கள் தொண்டாற்றும் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு வாழ்த்துதலை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

2. NEET - நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்ற நிறைவேற்றிய சட்ட முன்வரைவு, ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பி, 2017 ஆம் ஆண்டே, அவர் நிராகரித்த விடயத்தை மக்களுக்கு தெரிவிக்காமல், நீட் ரத்து செய்ய ஆவன செய்யப்படும் என்றே காலம் தாழ்த்தி 2 வருடமாக மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை கண்டனம் தெரிவிக்கிறது.

இந்த ஆலோசனை செயல்வீரர்கள் கூட்டத்திற்கு, செயலாளர் மறுமலர்ச்சி மைக்கேல், பொருளாளர் ராஜகுரு, துணை செயலாளர் வரதராஜ், செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், பாலசுப்ரமணியம், ஆனந்த், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

ஆனந்த், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment