Wednesday, July 17, 2019

இந்திய கிரிக்கெட் கேப்டன் கல்லூரி சீட்டுக்காக சென்னை மாநில கல்லூரி சென்ற வைகோ!

தெரு ஓரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான உலக கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை நேற்று 16-07-2019 அன்று மதிமுக தலைமை நிலையம் தாயகம் அழைத்து பாராட்டு தெரிவித்தார் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

அதில் இருவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்து இருப்பதாகவும் இடம் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதாகவும் தலைவரிடம் சொன்னபோது, தலைவர் வைகோ அவர்கள் நானே நேரில் வந்து முயற்சிக்கிறேன் என்று கூறினார்கள்.

அதன்படி இன்று 17-07-2019 காலை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்பு அந்த இரு வீரர்கள் மற்றும் கருணாலயா அமைப்பின் தலைவர் திரு.பால் மற்றும் தாயகம் சுரேஷ் ஆகியோருடன் மாநிலக் கல்லூரியின் முதல்வர் திரு ராவணன் அவர்களை நேரில் சந்தித்து வீரர்களுக்கு இடம் கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

முதல்வரும் ஆவண செய்வதாக கூறி இரு மாணவர்களுக்கும் மாநிலக் கல்லூரியில் படிப்பதற்கான இடத்தை உறுதி செய்தார். மாணவர்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

தலைவர் வைகோ தான் படித்த மாநிலக் கல்லூரியில் வெகு நாட்களுக்கு பிறகு வருவதாகவும். தான் பயின்ற போது உள்ள அனுபவங்களை அங்குள்ளவர்களிடம் மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தார்கள்.

இந்த கல்லூரியின் முன்னால் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு குரல் கொடுத்தோம் மாணவர்கள் ஒன்றாகத் திரண்டோம் என்று நினைவுகூர்ந்தார் தலைவர் வைகோ அவர்கள்.

சென்னை மாநில கல்லூரியின் முதல் இயக்குனர் மற்றும் முதல்வர் புரத்தன் போவள் சிலை முன்பு தலைவர் வைகோ நின்று படம் எடுத்துக்கொண்டார். அப்போது தான் பயிலும் போது பெறும் வெற்றி கோப்பையை எல்லாம் இங்கு கொண்டு வந்துதான் பார்வைக்கு வைப்பார்கள் என தலைவர் வைகோ அவர்கள் நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment