Tuesday, December 17, 2019

கேள்வி எண் 603: சிபிஐ க்கு, தன்னாட்சி அதிகாரம் அளிப்பீர்களா? பிரதமரிடம் வைகோ கேள்வி:

இணை அமைச்சர் அளித்துள்ள விளக்கம்
கீழ்காணும் கேள்விகளுக்கு பிரதமர் விளக்கம் அளிப்பாரா?
(அ) சிபிஐ நடத்திய விழா ஒன்றில் பங்கேற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சிபிஐ அமைப்பு, மக்களால் கூர்ந்து நோக்கப்படுகின்ற அரசியல் வழக்குகளை, முறையாகக் கையாளும் திறமை அற்றதாக இருக்கின்றது; சட்டத் தேவைகளை முறையாக நிறைவேற்ற அவர்களால் முடியவில்லை என்று கூறி இருப்பது உண்மையா?
(ஆ) அப்படியானால், அதுகுறித்து அரசின் கருத்து என்ன?
(இ) கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுமையும் உள்ள சிபிஐ அமைப்பின் பல்வேறு நீதிமன்றங்களில், பதிவு செய்யப்பட்டுள்ள, கவனத்திற்கு உரிய அரசியல் வழக்குகள் எத்தனை?
(ஈ) சிபிஐ அமைப்பை அரசின் பிடியில் இருந்து விடுவித்து, தன்னாட்சி அதிகாரங்களுடன் தனித்து இயங்குகின்ற வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
(உ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வு ஊதியம் ஆகிய பிரதமர் துறைகளின்
இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள விளக்கம்.
அ,ஆ ஆகிய இரு கேள்விகளுக்கு விளக்கம்:
2019 ஆகஸ்ட் 13 ஆம் நாள், தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற, டி.பி. கோலி நினைவுச் சொற்பொழிவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்.
தீர்ப்பு வழங்குவதில், காவல்துறையினரின் பங்கு அளிப்பை வலுப்படுத்துவது என்ற தலைப்பில் அவரது உரை அமைந்தது. (The Role of Police in strengthening Justice Delivery). அப்போது, சட்டங்களில் உள்ள தெளிவு இன்மை, சிபிஐ அமைப்பின் செயல்திறனைப் பாதிப்பதாக அவர் கூறினார். தற்போது சிபிஐ எதிர்கொள்கின்ற அறைகூவல்கள், எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல் நெறிகள் வகுப்பது குறித்தும், அவர் பேசினார்.
(இ) 2016,2017,2018 மற்றும் 31.10.2019 வரை, அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள செயலர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மை அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்கு எதிராக, 160 (RC/CE) ஊழல் வழக்குகளை, சிபிஐ பதிவு செய்து உள்ளது. அதன் முழு விவரங்கள், இத்துடன் இணைப்பில் தரப்பட்டு உள்ளன.
ஈ,உ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்: 1946 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தில்லி சிறப்பு காவல்துறை அமைப்புச் சட்டத்தின்படி (Delhi special Police Establishment, 1946), தில்லி சிறப்புக் காவலர்கள் என்ற தகுதியில், சிபிஐ அமைப்பு, குற்ற வழக்குகளைப் புலன் ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றது. அவர்கள் மேற்கொள்கின்ற வழக்கு விசாரணைகளில், நடுவண் அரசு தலையிடுவது இல்லை. சிபிஐ அமைப்பிற்குப் போதிய நிதி ஆதாரங்களும், இயக்குநருக்கு மேலாண்மை அதிகாரங்களும் உள்ளன.
இணைப்பு அ
அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள செயலர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 10 5 1 1 - 3
2017 26 14 1 3 3 5
2018 14 12 1 - 1 -
2019 4 4 - - - -
அக்டோபர்31வரை
மொத்தம் 54 35 3 4 4 8

இணைப்பு ஆ
பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 12 3 1 2 1 5
2017 15 7 1 4 - 3
2018 16 12 1 1 - 2
2019 7 6 - 1 - -
அக்டோபர்31வரை
மொத்தம் 50 28 3 8 1 10

இணைப்பு இ
அரசியல் தலைவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 11 4 2 4 - 1
2017 18 5 5 3 1 4
2018 13 6 4 2 - 1
2019 14 11 - 2 - 1
அக்டோபர்31வரை
மொத்தம் 56 26 11 11 1 7

No comments:

Post a Comment