Thursday, December 19, 2019

சோ.தர்மனுக்கு வைகோ வாழ்த்து!

சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று அலைபேசியில் பேசினார். மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் புதிய கருதுகோளாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதி, பல விருதுகளைக் குவித்து, கரிசல் மண்ணுக்கும், நெல்லைச் சீமைக்கும் எழுத்தாளர்கள் பெருமை சேர்த்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதற்கு சோ.தர்மன், நன்றி தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment