Thursday, August 27, 2020

அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

சமூகநீதி இலட்சியத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவிகிதத்தில், அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும், வரவேற்கத்தக்கது ஆகும்.

அன்றைய தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும்; அருந்ததியினர் இன மக்களுக்கு வரப்பிரசாதமாகும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
27.08.2020

No comments:

Post a Comment