Friday, March 18, 2022

இளையரசனேந்தல் பகுதி இணைப்பு பிரச்சினை - விரைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!

குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட இளையரசனேந்தல் பிர்க்காவில் உள்ள 12 ஊராட்சிப் பகுதிகளையும் இளையரசனேந்தலை தனி ஒன்றியமாக்கி தூத்துக்குடி வருவாய் மாவட்டத்துடன் இணைத்திட வேண்டும்;
அவ்வாறு இயலாத பட்சத்தில் 12 ஊராட்சி பகுதிகளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்பதை நான் தலைமைக் கழக செயலாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே
அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு இணங்க மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் திரு . பெரியகருப்பன் அவர்களை சந்தித்து எனது முதல் கோரிக்கையாக வலியுறுத்தினேன்.
நம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களும் தமது 15.08.2021 தேதியிட்ட கடிதம் மூலமும், தொலைபேசி வழியாகவும் மாண்புமிகு அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளார்கள்.
இதற்கிடையே இப்பகுதியை மீண்டும் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாகவும் ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டு, இந்த செய்தி எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நான் உடனடியாக மாவட்ட செயலாளர்கள் தி.மு. இராசேந்திரன் (தென்காசி ) ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி) இருவரையும் தொடர்பு கொண்டேன்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாக புறப்பட்டு சென்னைக்கு வர ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினேன்.
அதன்படி இன்று மார்ச் 18
காலை கீழ்கண்ட 21 மக்கள் பிரதிநிதிகள் தனி பேருந்தில் சென்னை வந்தனர்.
அவர்கள் அனைவரையும் இன்று மதியம் 01 மணி அளவில் மாண்புமிகு அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்களிடமும்,
மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.
ஆர் அவர்களிடமும் நேரில் அழைத்துச் சென்று நிலைமையை விளக்கினேன்.
நம் தலைவர் வைகோ எம்.பி..,அவர்கள்,
மக்கள் விரும்புகிற கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைத்திட பரிந்துரை செய்து வழங்கிய கடிதத்தையும் மாண்புமிகு அமைச்சர்களிடம் வழங்கினேன்.
மாண்புமிகு அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் தமக்கு இந்த பிரச்சனையில் தனிப்பட்ட நலன்கள் எதுவும் இல்லை என்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கோவில்பட்டியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க துணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
அதேபோன்று மாண்புமிகு அமைச்சர் அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து முறையிடுமாறும், தாம் இதில் தனிக்கவனம் செலுத்தி உதவுவதாகவும் உறுதி அளித்தார்.
விரைவில் நானும் தலைவரும் முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
எனவே தமிழக அரசின் ஒத்துழைப்போடு இளையரசனேந்தல் பகுதியின் ஊரக வளர்ச்சித் துறை உட்பட அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் இணைக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்பதை அப்பகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கேட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில் தனி பேருந்து ஏற்பாடு செய்து சென்னைக்கு வருகை தந்து கடமையாற்றிய அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும்மாவட்ட செயலாளர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே இளையரசனேந்தல் பகுதி மக்கள் எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
தலைவர் வைகோவும் நானும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சனையில் மக்கள் விரும்பும் தீர்வை கொடுப்போம்.
மாண்புமிகு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விவரம்...
தி.மு. இராசேந்திரன் ( தென்காசி மாவட்ட செயலாளர்
மதிமுக ) ஆர்.எஸ்.ரமேஷ் ( தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மதிமுக)
கே.விஜயலட்சுமி (ஊராட்சி மன்ற பெருந்தலைவர், குருவிகுளம்)
என்.ராஜகோபால் (கிழக்கு ஒன்றிய செயலாளர்),
ராமசாமி - ஊராட்சி மன்ற தலைவர் ஜமீன் தேவர்குளம், பாலகிருஷ்ணன் - துணை தலைவர் ஜமீன் தேவர்குளம்,
பி. குணசேகரன் - ஊராட்சி மன்ற
தலைவர் நக்கலமுத்தன்பட்டி
ஜி.கேசவன் ஊராட்சி மன்ற தலைவர் - சித்திரம்பட்டி,
எஸ்.சுரேஷ் - ஊராட்சி மன்ற தலைவர் அப்பனேரி ,
கமல் - ஊராட்சி மன்ற தலைவர் அய்யனேரி,
ஜெயக்குமார் - ஊராட்சி மன்ற தலைவர் புளியங்குளம்,
ஆர்.லிங்கராஜ் - ஊராட்சி மன்ற துணை தலைவர் பிள்ளையார்நத்தம்,
வி. ரங்கராஜ் - வெங்கடாசலபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்,
எஸ்.ரேவதி - பிச்சை தலைவன் பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர்,
சுகுணா கனகராஜ் - ஒன்றியக் குழு உறுப்பினர், வலசை கனகராஜ் - 8 வது வார்டு குருவிகுளம்,
எஸ். செந்தில் - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,
பி.செந்தில் - முன்னாள் துணைத் தலைவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் பிள்ளையார்நத்தம், பி.சௌந்தரராஜன் - சமூக ஆர்வலர், பிள்ளையார்நத்தம்
முத்துக்குமார் -சமூக ஆர்வலர், எஸ். அமுல்ராஜ் - சமூக ஆர்வலர், டி. கார்த்திகேயன் - சமூக ஆர்வலர், கனகராஜ் - பிள்ளையார் நத்தம்
நம்பிக்கையுடன்
உங்கள்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
18-03-2022 

No comments:

Post a Comment