Monday, March 21, 2022

மறுமலர்ச்சி தி.மு.க. உட்கட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு!

மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகத்தின் 09.03.2022 ஆம் நாளிட்ட அறிவிப்புக்கு இணங்க, துணைப் பொதுச்செயலாளர்கள் (2), தலைமைக் கழகச் செயலாளர் (1), தணிக்கைக்குழு உறுப்பினர் (1) ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் பெறும் நிகழ்ச்சி 21.03.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

தேர்தல் ஆணையாளரும், கழக அமைப்புச் செயலாளருமான வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அவர்களிடம் வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்னிலையில், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறுப்புகளுக்கு திரு ஆடுதுறை இரா.முருகன்,

திரு தி.மு.இராசேந்திரன் ஆகியோரும், தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு

திரு துரை வையாபுரி அவர்களும், தணிக்கைக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு திரு தி.சுப்பையா அவர்களும் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையாளரிடம் தாக்கல் செய்தார்கள்.

இவர்களைத் தவிர வேறு எவரும் வேட்பாளராக மனு அளிக்கவில்லை. வேட்புமனுக்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விவரம் முன்மொழிவோர், வழிமொழிவோர் விவரங்கள், இதற்குரிய கட்டணத்திற்கான வங்கி வரைவோலை ஆகியவைகளை ஆய்வு செய்து, முழுமையாகவும், சரியாகவும் இருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்.

தேர்தல் முடிவுகள் கழக சட்டதிட்டங்களின் விதிப்படி வருகின்ற 23.03.2022 அன்று சென்னையில் நடைபெறும் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அறிவித்துள்ளார்.

இவண்
வழக்கறிஞர் இரா.பிரியகுமார்
தேர்தல் ஆணையாளர்
கழக அமைப்புச் செயலாளர்

No comments:

Post a Comment