Friday, May 6, 2022

மதிமுக-29 ஆம் ஆண்டு துவக்க விழா!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இலட்சிய இயக்கம் நெருப்பாற்றில் நீந்தி தனது 29 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிகழ்ச்சி தலைமைக் கழகம் தாயகத்தில் 06.05.2022 நேற்று காலையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு, தொண்டர்களின் ஆரவார முழக்கங்களுக்கு இடையே கழகத்தின் வண்ண மணிக்கொடியை தலைவர் வைகோ அவர்கள் உயர்த்தி வைத்து கழகத் தோழர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தமிழ்நாட்டின் உயர்வுக்காகவே தொடர்ந்து போராடி வரும் கழகத்தின் 29 ஆம் ஆண்டு துவக்க விழா எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன் (மாமன்ற உறுப்பினர்), டி.சி.இராஜேந்திரன், கழககுமார், வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி (மாமன்ற உறுப்பினர்), பூவை மு.பாபு, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர், அணிகளின் நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகிக்கும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.

6-5-2022

No comments:

Post a Comment