Monday, May 16, 2022

பத்திரிகை செய்தி. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி!

முள்ளிவாய்க்கால் போரில் பலியான ஈழத்தமிழர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நாளை 17.05.2022 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணி அளவில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், திருமுருகன் காந்தி, தியாகு, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஆ.வந்தியத்தேவன், ஆவடி இரா.அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், வழக்கறிஞர் இரா.பிரியகுமார், வழக்கறிஞர் கோ.நன்மாறன், முராத் புகாரி, மல்லிகா தயாளன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராஜேந்திரன், கே.கழக குமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தங்கள் ஊடகத்தின் சார்பில், செய்தியாளர்கள்/ ஒளிப்பதிவாளர்களை, நாளை 17.05.2022 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தலைமைக் கழகம் 
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
16.05.2022

No comments:

Post a Comment