Sunday, May 15, 2022

ல்ண்டன்‌ ஆம்ஸ்பரியின் துணை மேயராக பொறுப்பேற்றிருக்கும் சாருலதாவுக்கு வைகோ MP வாழ்த்து!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள புறநகர் மாநகர் ஆட்சி மன்றம் ஆம்ஸ்பரியின் துணை மேயராக, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் சாருலதா தேர்வு பெற்று இருக்கின்றார். 

அவருடன், தலைவர் வைகோ அவர்கள் 
இன்று 14.5.2022 மாலை 5 மணிக்கு அலைபேசியில் பேசினார். 
அவருக்கு தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

உங்களுடைய வெற்றி, 
உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளித்து இருக்கின்றது என்றார். 

அதற்கு சாருலதா,

ஐயா, நீங்கள் என்னுடைய ரோல் மாடல். 
தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நீங்கள் ஆற்றிய உழைப்புக்கு நன்றி. 
உங்களோடு பேசியது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என்னுடைய பெயர், எங்கள் ஊரின் பெயரை எல்லாம் குறிப்பிட்டது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகின்றது என்றார். 

அப்போது தலைவர் வைகோ அவர்கள், 

நீங்கள் அடுத்து மேயர் ஆக வேண்டும்...
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற வேண்டும் என்றபோது, 
சாருலதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 

ஐயா, நீங்கள் லண்டனுக்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தார். 
தலைவரின் உடல் நலம் விழைந்தார். 

மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்த தலைவர் வைகோ அவர்கள், 
நீங்கள் சென்னைக்கு வரும்போது, என் இல்லத்திற்கு வருகை தர வேண்டும் என சாருலதாவுக்கு அழைப்பு விடுத்தார். 

இந்த உரையாடலுக்கு, லண்டனில் வேலை பார்க்கின்ற ஊற்றுமலை தம்பி முத்துகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார்.

தலைமைக் கழகம்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
தாயகம்,
சென்னை -600 008
14.05.2022

No comments:

Post a Comment