Saturday, May 14, 2022

பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ சக்கதேவி அம்மன் ஆலய திருவிழா!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஆங்கில படைகளுக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிந்து போக மாட்டோம் என்று தம் மக்களிடையே வீர உணர்ச்சியை தட்டி எழுப்பிய பாஞ்சை மன்னன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வ திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி அன்னை ஆலய திருவிழா தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் நேற்று (13.05.2022) நடைபெற்றது.

தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள் தொடர் ஓட்டம் மூலம் அணையா ஜோதியை கொண்டுவந்து சிறப்பு சேர்த்துக் கொண்டு இருந்தனர்.
எழுச்சி நிறைந்து, உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஜோதியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்கும் வாய்ப்பும் நேற்று சிறப்பாக அமைந்தது.
ஆலயத்தின் 66 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் இருந்து அன்னையின் ஆலயம் வரை தொடர் ஓட்டமாக சகோதரர் அய்யாசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் கோவில்பட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவையினர் சார்பில் கொண்டுவரப்பட்ட ஜோதியை பெற்றுக்கொண்டேன்.
முன்னதாக பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் வரவேற்பு நல்கிய பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மனை தரிசித்து விட்டு சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மக்கள் மத்தியில் பாஞ்சை வேந்தர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குன்றாத வீர உணர்ச்சியை பற்றியும், வீரம் மட்டுமே மன்னரின் அடையாளம் அல்ல சமுதாய ஒற்றுமையும் நம் மன்னரின் அடையாளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெள்ளையத்தேவன், தானாவதி பிள்ளை போன்றவர்களோடு இணைந்து பரங்கியர் படையை எதிர்கொண்டார் என்ற வரலாற்றை எடுத்துரைத்தேன்.
இன்றைய சூழலில் கல்வி என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பெண் கல்வி மிக மிக அவசியம். எனவே அனைவரும் தன் வீட்டு பெண் பிள்ளைகளை கட்டாயம் படிக்க வைப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.
நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் சிறையில் இருந்த வருடமும் கொரானா கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த வருடமும் தவிர சுமார் 50 ஆண்டுகளாக மன்னர் கட்டபொம்மனின் நினைவு இடமான கயத்தாறுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதைப் போல் நானும் அன்னை சக்கதேவி ஆலயத்திற்கு வருடம்தோறும் வருவதாக உறுதி அளித்தேன்.
மன்னரின் புகழை தமிழகம் மட்டுமல்ல, இந்த தேசம் முழுக்க பரவிக் கிடக்கின்றது. அதன் அடையாளமாகத்தான் நம்முடைய தலைவர் வைகோ அவர்கள் பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் இடத்தில் வைத்த வேண்டுகோளின்படி வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு மன்னர் அவர்களை தலைவரால் கவுரவிக்கப்பட்டது.
ஆதவன் இல்லாமல் விடியல் இல்லை..
சுவாசம் இல்லாமல் உயிர் இல்லை..
அலைகள் இல்லாமல் கடல் இல்லை..
உழவன் இல்லாமல் உண்ண உணவு இல்லை…
அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் இல்லாமல் அகிம்சை இல்லை..
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லாமல் விடுதலை வீர உணர்ச்சி என்பது இல்லை…
வீரபாண்டிய கட்டபொம்மன் தான் வீரத்தின் அடையாளம்..!
வீரபாண்டிய கட்டபொம்மன் தான் தெற்குச் சீமையின் அடையாளம்..!
வீரபாண்டிய கட்டபொம்மன் தான் சமுதாய ஒற்றுமையின் அடையாளம்..!
அழியாத புகழை கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் ஓங்குக ! என்று உரையாற்றினேன்.
உடன் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கமலா யோகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வீரபாண்டி செல்லச்சாமி, பவுன் மாரியப்பன், தூத்துக்குடி மாநகர் செயலாளர் முருகபூபதி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கணேசன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கேசவ நாராயணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மணிராஜ், புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் காளைச்சாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இக்பால் சின்ன மாரியப்பன், குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், மதுரை பூப்பாண்டி,தேனி சுருளி மணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி துணைத் தலைவர் அனல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சிவக்குமார்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் வள்ளிமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலகிருஷ்ணன், வரகனூர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொம்மு துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி நிர்வாகிகள் தம்பிகள் சசிகுமார், கே சிவா அப்பு ராஜ், V.P.K. மகேஷ் வழக்கறிஞர் D. விஜய் உள்ளிட்ட சகோதரர்களும் இளைஞர்களும் கழக தோழர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர்.
அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி அன்னையின் ஆசி அனைவருக்கும் பரவட்டும்
மாமன்னர் கட்டபொம்மனின் புகழ் ஓங்கட்டும்.
நன்றி..
அன்புடன்
துரை வைகோ.
தலைமை கழக செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.
14.05.2022.

No comments:

Post a Comment