Friday, May 27, 2022

புதிய அலுவலகம் திறப்பு மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு பங்கேற்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளராக கடந்த வருடம் 2021 அக்டோபர் 20 அன்று மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களால் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு மார்ச் 23 அன்று நடந்த 27 வது கழகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இன்று தலைமை கழக செயலாளர் அலுவலகம் - தலைமை அலுவலகம் தாயகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவரும், இந்திய அரசியல் வரலாற்றில் மூத்த தலைவரும், நேர்மையின் அடையாளமாகவும், எளிமையின் அடையாளமாகவும் திகழும் பொதுவுடைமை இயக்க தோழர் அய்யா நல்லகண்ணு அவர்களின் திருக்கரங்களால் இன்று 27-05-2022 காலை 10 மணியளவில் தாயகத்தில், குத்துவிளக்கு ஏற்றி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

தலைமை அலுவலகத்தின் ஊழியர்கள் சார்பில் மேலாளர்கள் மோகன்தாஸ், ருத்ரன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன், தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன், ,வழக்கறிஞர் நன்மாறன், அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார், வழக்கறிஞர் செந்தில் செல்வன் ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினர்.
அப்போது பேசிய தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் தற்போது அரசியலில் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். உங்களின் அலுவலகத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்து கவுரவ படுத்தியதற்கு மிக்க நன்றி எனவும் அரசியலில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் நிச்சயம் வருவீர்கள் எனவும் வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் கே.கழக குமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, டி. சி.ராசேந்திரன், மாவை.மகேந்திரன், மணவை தமிழ் மாணிக்கம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், பகுதி செயலாளர்கள் எழும்பூர் - தென்றல் நிசார், மயிலாப்பூர் ஆ.சேகர், கொளத்தூர் - ஜி.ஆர்.பி. ஞானம், எம்.ஜி.ஆர்.நகர் - ரவி, ஆலந்தூர் - கத்திப்பாரா ஜே.சின்னவன், சைதாப்பேட்டை எஸ்.வி.குமார், சூளைமேடு - குமார், அம்பத்தூர் - தாமோதரன், மாவட்ட அவைத்தலைவர் க.இளவழகன், மாவட்ட பொருளாளர் துரை குணசேகரன், பெருங்களத்தூர் நாராயணன், மாவட்ட துணை செயலாளர்கள் குரோம்பேட்டை நாசர், ஆலந்தூர் சம்பத், கௌசல்யா ரவி, மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள் காட்வின் அஜூ, விக்டர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.கே.சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ஹரி, மாவட்ட தொண்டர் அணி ஜஸ்டின்,வழக்கறிஞர் வினோத், மகளிர் அணி நிர்வாகிகள் ஆனந்தி ராமதாஸ், சகாய அரசி, தாஹிரா பானு, பகுதி அவைத்தலைவர் தனபாண்டியன் பகுதி துணைச் செயலாளர் எஸ்.லைனல், மாவட்ட பிரதிநிதி சரவணன், பெருங்களத்தூர் மணிகண்டன், தொண்டர் அணி நிர்வாகி பெருங்குடி பன்னீர் தாஸ், மைக்கேல் ராஜ், ராமதாஸ், புளியந்தோப்பு சாகுல் ஹமீது, விக்னேஷ், மணி, விநாயகம், டேவிட், உட்பட பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், தலைமை கழக ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
27.05.2022

No comments:

Post a Comment