Wednesday, March 29, 2023

விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி சித்ரவதை: சேரன்மாதேவி காவல் அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! வைகோ அறிக்கை!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்கiளைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கிடைத்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இவை காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்களாகும்.

பெருமைக்குரிய இந்திய காவல் பணி நிலையில் உள்ள ஓர் அலுவலரின் இச்செயல்கள் கடுமையான குற்றச் செயல்களாகும்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அலுவலரை காத்திருப்போர் பட்டிலில் வைத்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் முழுமையான அர்ப்பணிப்புடன் மக்கள் போற்றும் வகையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறையின் பெருமைக்கு இப்படிப்பட்டவர்களால் களங்கம் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

இவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டோரிடம் புகார்கள் பெற்று, இவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

29.03.2023

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல்! இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்!

கேள்வி எண்-2623
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ மற்றும் திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம் ஆகியோர் எழுத்து மூலம் எழுப்பிய கேள்விக்கு, 23.03.2023 அன்று இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் அளித்துள்ள பதில் வருமாறு:-
(அ) இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை அதிகரித்து வருவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்துகிறதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) அண்மையில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கைக் கடற்படையினர், பல இடங்களில் தமிழக மீனவர்களை தாக்கியிருக்கிறார்கள். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
(ஈ) தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படை வீரர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதா? (உ) அப்படியானால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
(ஊ) மீனவர்கள் காயம் அடைந்ததற்கும், என்ஜின், பேட்டரி மற்றும் பிற பொருட்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததற்கும் இலங்கையிடம் இழப்பீடு கோரப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள்?
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் பதில்:
(அ முதல் ஊ வரை) இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய செய்திகள் கிடைக்கும்போதெல்லாம், இந்திய அரசு இராஜதந்திர வழியில் இலங்கை அரசிடம் எடுத்துரைக்கிறது.
அண்மையில், 2023 பிப்ரவரி 27 அன்று இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 13 மார்ச் 2023 அன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2020 செப்டம்பரில் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டின் போது, அப்போதைய இலங்கை பிரதமருடன் இந்தியப் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் காணொலி வாயிலாக இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.
2021 ஜனவரி 5-7 வரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கொழும்புக்குச் சென்ற போது, இலங்கை மீன்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 2-5 ஆம் தேதி வரை இலங்கைக்குச் சென்றிருந்த போது, இலங்கையின் அப்போதைய வெளிவிவகாரச் செயலாளரின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிபோதும் இந்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனவரி 15, 2022 அன்று, இலங்கையின் அப்போதைய நிதியமைச்சருடனான சந்திப்பின் போது, இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். மார்ச் 2022 இல் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்ற போது, இலங்கை மீன்வளத் துறை அமைச்சருடன் இந்த விடயமாக கலந்துரையாடினார். மீண்டும் 2023 ஜனவரி 19-20 வரையிலான இலங்கை பயணத்தின்போதும் இது தொடர்ந்தது.
பின்னர் 4 மார்ச் 2023 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகையின் போதும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் இந்த விவகாரம் பேசப்பட்டது.
நவம்பர் 2016 இல் 2+2 முயற்சியைத் தொடர்ந்து, இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் மீன்வள அமைச்சர்கள் புது தில்லியில் சந்தித்தபோது, இருதரப்பு கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டது. மார்ச் 2022 அன்று, இரண்டு அரசுகளின் கூட்டுக் குழுவினர் 5வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்கள் பிரச்சினை முழு அளவில் விவாதிக்கப்பட்டன.
மீனவர்கள் பிரச்சினையை முற்றிலும் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று இரு தரப்பினரும் உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசு, நமது மீனவர்களின் கவலைகளை நன்கு உணர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பாடுபடுகிறது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.03.2023

Sunday, March 26, 2023

துரை வைகோ முயற்சியில் 20 வருடம் கழித்து மீண்டும் உயிர்பெற்ற கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்களின் தாயார் அன்னை மாரியம்மாள் பிறந்த ஊரில், துரை வைகோ முயற்சியில் 20 வருடம் கழித்து மீண்டும் உயிர் பெற்று எழுந்தது கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்.

இளந்தலைவர் துரை வைகோ அவர்களின் அரும்பெரும் முயற்சியால், மீட்டு கொண்டுவரப்பட்ட, A548 கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க திறப்பு விழாவில், தலைவர் வைகோ MP மற்றும் மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மதிமுக துணை பொதுச்செயலாளர்
தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சதன்திருமலைக்குமார் அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையினர், முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Friday, March 24, 2023

ராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை! வைகோ MP கண்டனம்!

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும்.
மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்.
இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பா.ஜ.க. இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது.
ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை செய்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது.
நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.03.2023

இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது! வைகோ MP கண்டனம்!

இராமேஸ்வரத்திலிருந்து மார்ச்சு 22 ஆம் தேதி 540 விசைப் படகில் மீன்படித் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து, சிங்களக் கடற்படையினர் விரட்டி உள்ளனர். இலங்கை ரோந்து கப்பலில் வந்த அவர்கள் துப்பாக்கியைக் காட்டி நமது மீனவர்களை மிரட்டி இருக்கின்றனர்.

கடலில் மீன் பிடிக்க வீசிய வலைகளைக்கூட விட்டு விட்டு தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படகுகளில் தப்பி உள்ளனர்.
கடந்த 22 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மார்ச்சு 23 ஆம் தேதி அதிகாலை இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து நமது மீனவர்களை தாக்கி, விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இரண்டு படகுகளுடன் 12 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்கு உரியது.
இலங்கை சிறையில் உள்ள 28 மீனவர்களை விடுவிக்கவும், மீன்பிடி படகுகளை மீட்கவும் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.03.2023

Wednesday, March 22, 2023

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: ஒன்றிய அமைச்சரின் விளக்கத்தால் தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோதப் போக்கு அம்பலம்! துரை வைகோ அறிக்கை!

நேற்று (21.3.2023) நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் குறித்து  தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு செய்தி மற்றும் ஒளிப்பரப்புத் துறை ஒன்றிய அமைச்சர்  அனுராக் சிங் தாக்குர் அவர்கள்,  ரம்மி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவனை 7 இல் பட்டியல் 2 இல் 34 ன் படி  மாநில அரசுக்கு உண்டு என்று  தெரிவித்துள்ளார்.

'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறிய தமிழ்நாடு ஆளுநர், ரம்மி ஆன்லைன் சூதாட்டதடை சட்டத்தை திருப்பி அனுப்பிய நிலையில், ஒன்றிய அரசின் இந்த பதில்  தளபதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலையை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது.  


ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து, கடனாளியாகி மன உளச்சலுக்கு உள்ளாகி இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மனநல மருத்துவர்களும் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.


ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது மற்றும் முறைப்படுத்துவது குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் இயற்றப்பட்டு, செப்டம்பர் 26 அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.


இந்த அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 17 ஆம் நாள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 19 ஆம் நாள் ஆளுநருக்கு இசைவுக்காக அனுப்பப்பட்டது. 


இதில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர்.


'Public Order, Public Health, Theaters and Dramatic performances என்ற பிரிவுகளின்படிதான்  இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று  கடந்த நவம்பர் 24 ஆம் நாள் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்த பின்னரும் ஆளுநர் 'கிடப்பில்' போட்டிருந்தார்.


ஏற்கனவே 3.8.2022 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. மகாபாலி சிங் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்த கேள்விக்கு, அப்போதைய ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ராஜிவ் சந்திரசேகர் அவர்கள், 'எல்லா  வகையான   சூதாட்டங்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 7 உட்பிரிவு 2 ன் கீழ்மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வருகிறது'. 


'மேலும் ‘Information and Technology (IT) Act 2000’ சட்டத்தில் இந்த சூதாட்ட விளையாட்டுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.  சூதாட்ட விளையாட்டுகள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை .  இவை Police and Public Order என்பதன் கீழ் வருவதால் அவை மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது' என்று மிகத் தெளிவாக கூறியுள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு உரிய விளக்கம் கொடுத்த பின்பும், ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தெளிவான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் அளித்த பின்பும், இப்போது 5 மாதங்களுக்குப் பிறகு 'மத்திய அரசின் கீழ்வரும் விவகாரத்தில் மாநில அரசு எப்படி சட்டம் இயற்றலாம்' என்று கேள்வி அனுப்பி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.


நமது தலைவர் வைகோ அவர்களும் இந்த ஆன்லைன் சட்டம் குறித்த கேள்விகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி அதற்கான விடை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.


இப்போது செய்தி மற்றும் ஒளிப்பரப்புத் துறை ஒன்றிய அமைச்சர்  அனுராக் சிங் தாக்குர் கூறியுள்ள விளக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர், மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக, மத சக்திகளுக்கு துணை போகும் வகையில் செயல்பட்டு அந்த பதவிக்கு இழிவை ஏற்படுத்தியுடன் அந்த பதவில் நீடிக்க தகுதி யிழந்தவராகிறார்.


இது போன்று தெலுங்கான மாநில ஆளுநர், மாநில அரசு இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறித்து, தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. உச்சநீதி மன்றமும் இது குறித்து ஒன்றிய அரசுக்கு விளக்கம் கேட்பதாக கூறியுள்ளது.


இதே போன்று தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, தமிழ்நாடு ஆளுநரின் தமிழ்நாட்டு மக்கள் விரோத போக்கிற்கும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அன்புடன்

துரை வைகோ

தலைமைக் கழகச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.

22.03.2023

வேளாண்துறை வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் பட்ஜெட். வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறது.


உணவு தானிய உற்பத்தியில் இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.


வேளாண் பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; இலவச மின்சாரம் வழங்க ரூ.6536 கோடி ஒதுக்கீடு; பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மானியம் ரூ.2337 கோடி ஒதுக்கீடு; காவிரிப் படுகை மாவட்டங்களில் நாகை -திருச்சி வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு; கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 2,504 கிராம ஊராட்சிகளுக்குச் செயல்படுத்த ரூ.230 கோடி ஒதுக்கீடு.


மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகளால் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும்.


60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், ஆதி திராவிட, பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 விழுக்காடு மானியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை.


பனை, தென்னை, வாழை, பலா, மிளகாய், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி மற்றும் மல்லிகை, முருங்கை, குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களால் வேளாண்மைத் தொழில் புத்தாக்கம் பெறும்.


நுண்ணீர் பாசன முறையை நிறுவ ரூ.450 கோடி மானியம் வழங்குவதும், ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம், சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பயன்பெறவும் திட்டங்கள் அறிவித்து இருப்பதும் பாராட்டுக்குரியவை ஆகும்.


இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ஐந்து இலட்ச ரூபாயுடன், பாராட்டுப் பத்திரம் குடியரசு நாள் விழாவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்.


அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட பத்து வேளாண் விளைபொருட்களுக்கு உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளிக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது.


தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறை வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்திப் பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியதாகும்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

21.03.2023

Saturday, March 18, 2023

தமிழ்நாடு அரசின் அங்கக வேளாண்மை கொள்கை 2023 யை மனதார வரவேற்கிறோம். துரை வைகோ அறிக்கை!

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மண்வளம் பாதிக்கப்படுகிறது.

இந்த ரசாயண உரங்களில் கலந்து இருக்கும் நச்சு வேதிப் பொருட்கள் நம் உடலில் நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றன.
இன்றைய சூழலில், உணவு பழக்க வழக்கங்களால் சிறுவர்களுக்குக்கூட இதய நோய்கள், ஒவ்வாமை, தோல் நோய்கள், புற்று நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிறுநீரகங்கள் தொற்றுகளுக்கு ஆளாகி பாதிப்படைகின்றன.
இந்த அழிவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்க இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் முறை அவசியமாகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக, பல்வேறு விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு 'தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023' உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கையின் படி, நச்சு தன்மை வாய்ந்த இரசாயண இடுபொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம், நீரையும், மண்ணையும் பாதுகாக்க வழிவகுக்கும் .
மேலும், அங்கக சான்றளிப்பு முறைகளில் எளிமை, பண்ணைக்கு அருகிலேயே உற்பத்தி செய்யக் கூடிய தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடு பொருள்களை ஊக்குவித்தல், சுற்றுச் சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல் ஆகிய வற்றிருக்கும் இக்கொள்கை வழிவகுக்கிறது.
அனைத்து வகையான பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்க மாநில அளவில் மரபணு வங்கி உருவாக்கப்படும் என்பதையும் இக்கொள்கை உறுதிபடுத்துகிறது.
தமிழ் மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மையை அறிமுகப் படுத்தும் தமிழ் நாடு அரசின் இக் கொள்கையை மனதார வரவேற்கிறோம்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
15.03.2023

Sunday, March 12, 2023

தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஏழுமலை இல்ல திருமண வரவேற்பு!

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஏழுமலை அவர்களது மகள் E.மதுமிதா - K.பாலாஜி இவர்களது திருமண வரவேற்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் தலைமையில் இன்று (12.03.2023) மாலை நடைபெற்றது.

திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்வியல் அறநெறி நூலான திருக்குறள் நூலை வழங்கி மணமக்கள் இருவரும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ வாழ்த்தினேன்.
நிகழ்வில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ. வளையாபதி, மாவட்ட அவை தலைவர் படப்பை கா. செல்வம், மாநில இலக்கிய அணி செயலாளர் காரை எஸ். செல்வராஜ், மாவட்ட பொருளாளர் S.நாராயணன், மாவட்ட துணை செயலாளர்கள் குரோம்பேட்டை நாசர்,துரை பாலாஜி, மலர்கொடி பாபு, பகுதி செயலாளர் இராம. அழகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை மணிவண்ணன், வழக்கறிஞர் குமார்,மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன், காஞ்சிபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் அமுதா செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள் P.முருகன், K.சிவா, வார்டு உறுப்பினர் திவ்யா பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் குன்றத்தூர் தெற்கு வழக்கறிஞர் இரா.நேதாஜி, குன்றத்தூர் வடக்கு P.முருகன், திருப்பெரும்புதூர் ரேடியோ சேட் கண்ணன்,வாலாஜாபாத் பாஸ்கர், நகர செயலாளர்கள் தாம்பரம் M.Y.ராஜ முகமது, பல்லாவரம் M.ஹக்கீம், பம்மல் S.P.தேவேந்திரன், அனகாபுத்தூர் S.கதிர்வேல், செம்பாக்கம் L. சேகர், பேரூர் செயலாளர்கள் வாலாஜாபாத் சிவக்குமார், சிட்லபாக்கம் T.Aஆறுமுகம், திருநீர்மலை V. பிரேம் குமார், சிட்லபாக்கம் T.A. ஆறுமுகம், மாடம்பாக்கம் K.சூரைய்யா, திருப்பெரும்புதூர் மைக்கேல், பொதுக்குழு உறுப்பினர்கள் R.ராதா மணி, T.D.K.சந்தான கோபாலன், K.A.K.வேல்முருகன், முகவை சொக்கலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கு. பிரவீன் குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் க. கோபிநாத், தொண்டர் அணி செயலாளர் ஸ்டாலின், இலக்கிய அணி செயலாளர் வைகோ பெருமாள், இலக்கிய அணி தலைவர் தும்பா பிரான்ஸில், நெசவாளர் அணி P.R. சௌந்தர், வினோத் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.03.2023.

மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் டி.ஹரி மறைவுக்கு நேரில் அஞ்சலி..!

வடசென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த D.கௌரி சங்கர் என்ற D.ஹரி அவர்கள், நமது இயக்கம் தொடங்கிய காலம் முதல் அந்த பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வந்தவர்.

சென்னை மண்டல தளபதிகளில் முதன்மையானவராக இருந்து மறைந்த, ஏழுமலை நாயக்கர் கழகம் வளர்த்த பகுதியான ராயபுரம் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து பின்னர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பகுதி கழகச் செயலாளர், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
நேற்று (11.03.2023) மாலை அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தியை மாவட்ட செயலாளர் அண்ணன் சு.ஜீவன் அவர்களின் மூலம் அறிந்து வருத்தமுற்றேன்.
ஓராண்டுக்கு முன்னர் தலைமை கழகம் தாயகத்தில் ஹரி அவர்களை சந்தித்தபோது தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவரிடம் தகுந்த ஆலோசனைகளை வழங்கினேன்.
இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அவர் என்னை சந்தித்தபோது, புற்றுநோய்க்கு இயற்கை வழி மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் அவரை கடிந்து கொண்டேன். நான் உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதி வாங்கித் தருகிறேன். அங்கிருந்து சிகிச்சையினை தொடருங்கள் என்று அப்போது அறிவுறுத்தினேன்.
அடுத்தமுறை சந்திக்கும் போது உடல் இளைத்து காணப்பட்ட ஹரி அவர்களிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது குறித்து கண்டித்ததுடன், மாவட்டச் செயலாளர் அண்ணன் சு.ஜீவன் அவர்களிடமும் உங்களைப் போன்றவர்கள் கூட அவருக்கு அறிவுறுத்தாமல் இருக்கிறீர்களே என வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் ஜீவன் அவர்கள், இயற்கை வழி மருத்துவம் நன்றாக இருப்பதாக ஹரி சொல்கிறார் என்றார். அதற்கு வாய்ப்பே இல்லை. இப்படியே விட்டுவிட்டால் விபரீத விளைவுகள் தான் எற்படும் என எச்சரித்தேன்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஹரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவரது உடல் நலம் பற்றி அவரது தாயார், மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தேன்.
அப்போது, மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
உரிய நேரத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதி பெற்று மருத்துவ சிகிச்சை எடுக்காமல் இவ்வாறு காலம் தாழ்த்தி தற்போது சிகிச்சை எடுத்து வருகிறீர்களே என்று ஹரியிடம் வருத்தப்பட்டு கொண்டேன். சில மருத்துவ ஆலோசனைகளைக் கூறி தைரியமாக இருக்க சொல்லிவிட்டு சிறிய பொருளாதார உதவியையும் செய்துவிட்டு வந்தேன்.
அதன்பிறகு, மாவட்டச் செயலாளர் அண்ணன் சு.ஜீவன் அவர்களிடம், ஹரியின் உடல்நலம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்தேன்.
ஆனால் சிகிச்சை பலனின்றி தம்பி ஹரி அவர்கள் நம்மை விட்டு நேற்று மறைந்தார். இன்று முற்பகல் 11 மணி அளவில் அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினரிடம் எனது இரங்கலை தெரிவித்துக் கொண்டேன்.
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து துடிப்புடன் செயல்பட்டு வந்தவர் தம்பி ஹரி அவர்கள். எப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் இருப்பார். அவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் இருக்கிறார். ஹரியின் உடன்பிறந்த சகோதரியின் கணவர் அவர்களிடம் உரையாடிக்கொண்டு இருக்கும் போது, குறைந்தபட்சம் அந்த பையனின் கல்விக்கு உறுதுணையாக இருங்கள் என கேட்டுக் கொண்டேன். அவரும் அந்த குடும்பத்திற்கு பல்வேறு சூழல்களில் உதவியாக இருந்து வருபவர். நல்ல மனிதர். நாங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். பார்த்துக் கொள்கிறேன் என்றார். அண்ணன் சு.ஜீவன் அவர்களிடம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தோழர்களிடம் நிதி திரட்டி நம்மால் முடிந்த உதவியை ஹரியின் குடும்பத்திற்கு செய்ய வேண்டும் என தெரிவித்து விட்டு அங்கிருந்து விடைபெற்றேன்.
தம்பி ஹரியின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல வடசென்னை கிழக்கு மாவட்டக் கழகத்திற்கும் பெரிய இழப்பாகும்.
தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் மா. வை.மகேந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், வடசென்னை கிழக்கு மாவட்ட அவை தலைவர் பூங்கா ராமதாஸ், பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார், ஜி.ஆர்.பி.ஞானம், பெரம்பூர் பாஸ்கர், கிரி, பாபா ஜெகன், இராம அழகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் தியாகராஜன்,லட்சுமி ஜீவா, சுரேஷ் அப்பன் துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கோவில்பட்டி ராமச்சந்திரன், அஜ்மல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரிலுவான் கான், கோபிநாத், இணையதள பொறுப்பாளர் ஆர்.வி. சதீஷ், வழக்கறிஞர் குமார், மாநில ஆபத்து உதவிகள் அணி துணை செயலாளர் ஜானகி ராமன், மாநில வெளியீட்டு அணி துணை செயலாளர் விக்டர், வினோத் குமார், வைகோ யுவராஜ், சாகுல் ஹமீதுமற்றும் வட்ட கழக செயலாளர்கள் அக்கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வருத்தமுடன்..
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.03.2023.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்!

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 அன்று தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். அடுத்தகட்ட உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத் தேர்வுகள் விளங்குகின்றன.

மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுமாறு இளம் மாணவச் செல்வங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள் எழுதப்போகின்ற இத்தேர்வுகள் மட்டுமே அவர்களின் அறிவாற்றலை அளவிடும் கருவி அல்ல. மாணவர்தம் பயிலும் திறனை அறிந்திடும் அளவுகோல் என்ற அளவில் மட்டுமே தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த எவ்வித அழுத்தத்தையும், கெடுபிடிகளையும் திணிக்க முயல வேண்டாம். அதனால் எதிர்விளைவுகளே ஏற்படும். தம் வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை விதைத்து குழந்தைகளைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட கனவுகளை இத்தேர்வின் மூலம் நீங்கள் அடைய உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் ஆசிரியர்களுடன் இணைந்து நானும் எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
12.03.2023

Saturday, March 11, 2023

திருமாவளவன் MP வைகோ MP உடன் சந்திப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களை அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.


https://www.youtube.com/watch?v=_mgNwtyMAx4

மதுரை இரயில்வே கோட்ட அளவிலான இரயில்வே வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்!

10.03.2023-மதுரை

மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வைகோ அவர்கள் நேரில் கலந்து கொண்டு வலியுறுத்திய கோரிக்கைகள்
1.திருநெல்வேலி - தாம்பரம் (வ.எண். 06003/04) (வழி தென்காசி) வாரந்திர இரயிலை தினசரி ரயிலாக இயக்கி வேண்டும்.
2.திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் (வண்டி எண். 06023/30) வழி தென்காசி வாராந்திர இரயிலை, தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.
3. நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் உள்ள திருநெல்வேலி மைசூரு வழி தென்காசி, மதுரை, பெங்களூரு வழித்தடத்தில் விரைவு இரயில் இயக்கிட வேண்டும்.
4. வாரத்தில் மூன்று நாட்கள் தற்போது இயக்கப்படும் சென்னை - மானாமதுரை - செங்கோட்டை வரை இயக்கப்படும் சிலம்பு அதி விரைவு இரயிலை (வ.எண். 20681/82) தினசரி இரயிலாக இயக்கிட வேண்டும்.
5.சிலம்பு அதி விரைவு இரயில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் 3 பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு குளிர்பதன வசதியுடன் 2 பெட்டிகளும் கூடுதலாக இணைக்க வேண்டும்.
6. ஹைதராபத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12759/60) இரயிலையோ அல்லது ஹைதராபாத்தில் இருந்து வேறு ஏதேனும் ஒரு இரயிலையோ தென்மாவட்ட மக்களின் வசதிக்காக திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை இயக்கிட வேண்டும்.
7.குருவாயூர் - புனலூர் (வ.எண். 16327/28) விரைவு இரயிலை தென்காசி வழியாக மதுரை வரை விரிவுபடுத்தி இயக்கிட வேண்டும். இது IRTTC 2022 கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த இரயில் சேவையில் மதுரை சென்னை
தேஜஸ் விரைவு இரயிலுக்கு இணைப்பு வசதி கிடைக்கும். 8. திருநெல்வேலி பாலக்காடு (வழி தென்காசி) பாலருவி விரைவு இரயிலை (வண்டி எண். 16791/92) தூத்துக்குடி வரை நீட்டித்திட வேண்டும்.
9. மதுரை - செங்கோட்டை சிறப்பு விரைவு இரயிலை (வண்டி எண். 06503/04) கொச்சுவேலி அல்லது திருவனந்தபுரம் வரை வழி கொல்லம்) விரிவுபடுத்தினால் தென்காசி மாவட்ட மக்களுக்கு கேரள மாநில தலைநகருடன் முதல் தொடர்பு இரயில் சேவையாக அமையும்.
கீழ்க்கண்ட இரயில் நிலையங்களில் இரயில் நிறுத்தங்கள் அவசியமாகும் : 1. சென்னை - கொல்லம் விரைவு இரயிலுக்கு (வ.எண். 16101/02) சிவகாசியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
2.பாலருவி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16791/92) இரயிலுக்கு பாவூர்சத்திரம், கீழக்கடையம் இரு வழி நிறுத்தம் வேண்டும்.
3. மதுரை - புனலூர் (வண்டி எண். 16729/30) விரைவு இரயிலுக்கு சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
4. சென்னை-கன்னியாகுமரி விரைவு இரயிலுக்கு (வ.எண். 12633/34) சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
5. சென்னை - திருச்செந்தூர் விரைவு இரயிலுக்கு (வண்டி எண். 16105/06) சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
6.கோயமுத்தூர் நாகர்கோவில் விரைவு இரயிலுக்கு (வ.எண். 22667/68) சாத்தூரில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
7.திருநெல்வேலி - தாம்பரம் (வ.எண். 06004/03) கடையநல்லூர், பாம்புக் கோவில் சந்தை, சங்கரன்கோவில் ஒரு நிமிட இரயில் நிறுத்தம் வேண்டும்.
8. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண். 12662/61) திருமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்.
இரயில் நிலையம் சீரமைத்தல்:
தென்காசி- விருதுநகர் வழித்தடத்தில் சங்கரன்கோவில் - இராஜபாளையம் இடையே அமைந்துள்ள கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் புதுப்பித்து இயங்கச் செய்திட வேண்டும்.
இதர கீழ்கண்ட வசதிகள் செய்யப்பட வேண்டும் :
1. விருதுநகர் செங்கோட்டை திருநெல்வேலி புனலூர் பாதையில் மின்மயமாக்கப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.
2. மதுரை கோட்டத்தில் உள்ள இரயில் நிலையங்களில் நடைமேடைகளை தரம் உயர்த்திடவும் பயணிகள் கடந்து செல்ல உயர்மட்ட பாலங்களையும் போதிய அளவு அமைத்திட வேண்டும். நடைபாதை
3. இராஜபாளையம் இரயில் நிலையத்தின் வடமேற்கு பகுதியில் கூடுதல் நுழைவாயில் மற்றும் பார்க்கிங் வசதி செய்திட வேண்டும்.
4. செங்கோட்டை - அச்சன்கோவில்; சங்கரன்கோவில் - புளியங்குடி சாலைகளில் இரயில்வே பாலம் அமைத்திட வேண்டும்.
5. சென்னிகுளம் கரிவலம்வந்தநல்லூரி) சோழபுரம், ராஜபாளையம் இரயில் பாதையில் கடந்து செல்ல அடிமட்ட பாதைகள் அமைக்க வேண்டும். 6.செங்கோட்டை ரயில் நிலையத்தில் Stabling Lines அதிகரிக்க வேண்டும்.
7. தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் இரயில் நிலைய நடைமேடைகளில் மேற்கூரைகளை விரிவுப்படுத்தி அமைக்க வேண்டும்.
8. தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களில் பெட்டிகள் நிற்கும் இடங்களை தொடுதுறையில் தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.
9. 24 பெட்டிகள் நிற்கத்தக்க அளவு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் இரயில் நடைமேடைகளை மேம்படுத்த வேண்டும்.
10. MEMY Shed - மதுரையில் கட்டப்பட வேண்டும்.
11. திருச்செந்தூர் இரயில் நிலைய நடைமேடைகள் விரிவுபடுத்துவதுடன் கூடுதல் நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
12. பாவூர்சத்திரம் இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு உதவியாளர் சிப்ட் முறையில் நியமித்திட வேண்டும்.
13. நாகர்கோவில் வள்ளியூர் இடையே அமைந்துள்ள காவல்கிணறு ரயில் 1 நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
14. திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே உள்ள காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை பணிகளை விரிவுபடுத்தி முடிக்க வேண்டும். -
15. கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பெருகி வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு தானியங்கி நகரும் படிக்கட்டுகள் கொண்ட பாதை அமைத்திட வேண்டும்.
16. திருநெல்வேலி புறநகர், கன்னியாகுமரி இரயில் நிலையப் பகுதிகளை மதுரை கோட்டத்தில் இணைத்திட வேண்டும்.
17. ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் இடையே கரிவலம் வந்தநல்லூர் ரயில் நிலையம் மீண்டும் வேண்டும்.
விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல இரயில் பாதையாக மாற்றிய போது, கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த ரயில் நிலையத்தை தங்கள் பயணத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதி பயணிகள் ரயில் சேவைகளைப் பயன்படுத்துவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ராஜபாளையம் & சங்கரன்கோவில் இடையே உளள் தூரம் 33 கி.மீ இந்த 33 கி.மீ நீளமான பிளாக் பிரிவு காரணமாக நிர்வாகமும் பல செயல்பட்டு சிரமங்களை எதிர்கொள்கிறது. கரிவலம் வந்தநல்லூர் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலையத்தை உடனடியாக இரயில் நிலையமாகத் திறக்க வேண்டும். இது பொதுமக்களுக்கு உதவுவதோடு, நிர்வாக ரீதியான சிரமத்தையும் குறைக்கும்.
18. ரயில்வே தேர்வு வாரியத்தின் (RRB சென்னை) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் மதுரை கோட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB திருவனந்தபுரம்), தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. சேலம் கோட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, புதிய சேலம் கோட்டம் அமைப்பதற்கு, கேரளத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசியலை அமைதிப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் சிலவற்றை ரயில்வே நிர்வாகம் செய்தது.
(i) பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு நிலையங்கள் மதுரை கோட்டத்தில் இருந்து பிரித்து பாலக்காடு கோட்டத்திடம் ஒப்படைத்தது. (ii) மதுரை கோட்டத்தின் காலி பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த இரண்டு அறிவிப்புகளம் வெளியானபோது, நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போது மேற்கண்ட இரண்டு உத்தரவுகளையும் திரும்பப்பெற்று மதுரை கோட்டத்தை நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோருகிறேன்.
19. திண்டுக்கல் - கோவில்பட்டி இடையே மின்சாரத்தால் குறைந்த மற்றும் நடுத்தர தூரம் வரை இயங்கும் MEMU ரயில் வேண்டும்.
தற்போது திருநெல்வேலி -சென்னை எழுப்பூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் நான்கு ஜோடி மெமு சேவைகளை இயக்க ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடை ரோடு அவ்வாறு இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.
20.கொங்கன் இரயில்வே வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வேண்டும் சுதந்திரத்திற்குப் பிறகு ரயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் இரயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் இரயில்வேயைப் பயன்படுத்தவில்லை. தற்போது ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22630/22629) திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே கொங்கன் ரயில்வே வழியாக அதிக ஆதரவுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே மும்பையை அடைய தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட வேண்டும்.
21. திருமங்கலத்தில் ரயில் எண். 12662/12661 பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்.
இப்போது ரயில் எண். 12694 தூத்துக்குடி - சென்னை முத்து நகர் விரைவு வண்டி திருமங்கலத்தில் நின்று செல்கிறது. ஆனால் மறு மார்கத்தில் வரும் போது நிற்பதில்லை. இந்த ரயிலின் நேரம் திருமங்கலத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்றதாக இல்லை. எனவே முத்து நகருக்கு பதிலாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் திருமங்கலத்தில் நின்று செல்ல ஆவண செய்ய ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.
22.தெற்கு ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட அனைத்து இரயில் நிலையங்களிலும் இரயில் பெட்டிகள் நிற்கும் இடங்கள் நடைமேடையில் கணினி திரையில் காட்டப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் திரு. வைகோ எம்.பி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.