Wednesday, March 8, 2023

மதிமுக நடத்திய சர்வதேச மகளிர் தின விழா!

மார்ச் 08, சர்வதேச மகளிர் தின விழா தலைமை அலுவலகம் தாயகத்தில் இன்று (08.03.2023) காலை மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர்.ரொஹையா ஷேக் முகமது தலைமையில் நடைபெற்றது.

நமது இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்ததோடு வாழ்த்துரை வழங்கினார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய ஆளுமை சாவித்திரிபாய் புலே அவர்களின் பெருமையைப் பற்றியும் அன்றைய காலகட்டத்தில் நிலவி வந்த ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களுக்காக போராடி பெண் கல்வி,பெண் சுதந்திரம் ஆகியவற்றுக்காக போராடி வெற்றி கண்ட அன்பின் சிகரம் அன்னை சாவித்திரிபாய் புலே அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பயணத்தை குறிப்பிட்டு கருத்துரை வழங்கினேன்.
அரங்கம் நிரம்பி வழிய அமர்ந்திருந்த மகளிர் அணியினரிடம் ஆண் பிள்ளைகளுக்கு நிகரான அனைத்து சுதந்திரத்தையும் பெண் பிள்ளைகளுக்கும் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.
நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திருமதி மல்லிகா தயாளன்,திருமதி சந்திரா ஜெகநாதன், திருமதி ராணி செல்வின், திருமதி கிரிஜா சுப்பிரமணியன், நள தமயந்தி,திருமதி ஜானகி, மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஆனந்தி ராமதாஸ், உஷா ஜெயச்சந்திரன், ராஜேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர்கள் லட்சுமி ஜீவா,கௌசல்யா ரவி,சந்திரவதனி, மாநகராட்சி மன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி, திருமதி பத்மா பழனிச்சாமி, திருமதி கௌரி கருணாகரன், குருவிகுளம் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், நகர் மன்ற தலைவர் சுமதி முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தேவி ராஜகோபால், அமுதா செல்வம், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வி காளிமுத்து, சித்ரா தங்கவேல், சித்ரா வெள்ளிங்கிரி,!வனிதாமணி ஜெயக்குமார், ஜெ.காயத்ரி, ராமு அம்மாள், சுகந்தி துரைசிங்கம்,நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி ஆறுமுகசாமி, உஷாராணி, கீதா, சுப்புலட்சுமி, நஜிமா பானு, பேரூராட்சி உறுப்பினர்கள் மாரியம்மாள் கணேசன், முருகேஸ்வரி சுரேஷ்,லதா, ராதா ருக்மணி கணபதி, குறிஞ்சி,வனிதா, ஜீவா, லதா பழனிச்சாமி,ஊராட்சி குழு உறுப்பினர்கள் சித்ரா சங்கர், சங்கீதா கணேஷ்குமார்,சுகுணா கனகராஜ், முருகேஸ்வரி கோட்டியப்பன், வீரலட்சுமி செல்வக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
08.03.2023.

No comments:

Post a Comment