Saturday, March 11, 2023

மதுரை இரயில்வே கோட்ட அளவிலான இரயில்வே வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்!

10.03.2023-மதுரை

மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வைகோ அவர்கள் நேரில் கலந்து கொண்டு வலியுறுத்திய கோரிக்கைகள்
1.திருநெல்வேலி - தாம்பரம் (வ.எண். 06003/04) (வழி தென்காசி) வாரந்திர இரயிலை தினசரி ரயிலாக இயக்கி வேண்டும்.
2.திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் (வண்டி எண். 06023/30) வழி தென்காசி வாராந்திர இரயிலை, தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.
3. நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் உள்ள திருநெல்வேலி மைசூரு வழி தென்காசி, மதுரை, பெங்களூரு வழித்தடத்தில் விரைவு இரயில் இயக்கிட வேண்டும்.
4. வாரத்தில் மூன்று நாட்கள் தற்போது இயக்கப்படும் சென்னை - மானாமதுரை - செங்கோட்டை வரை இயக்கப்படும் சிலம்பு அதி விரைவு இரயிலை (வ.எண். 20681/82) தினசரி இரயிலாக இயக்கிட வேண்டும்.
5.சிலம்பு அதி விரைவு இரயில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் 3 பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு குளிர்பதன வசதியுடன் 2 பெட்டிகளும் கூடுதலாக இணைக்க வேண்டும்.
6. ஹைதராபத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12759/60) இரயிலையோ அல்லது ஹைதராபாத்தில் இருந்து வேறு ஏதேனும் ஒரு இரயிலையோ தென்மாவட்ட மக்களின் வசதிக்காக திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை இயக்கிட வேண்டும்.
7.குருவாயூர் - புனலூர் (வ.எண். 16327/28) விரைவு இரயிலை தென்காசி வழியாக மதுரை வரை விரிவுபடுத்தி இயக்கிட வேண்டும். இது IRTTC 2022 கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த இரயில் சேவையில் மதுரை சென்னை
தேஜஸ் விரைவு இரயிலுக்கு இணைப்பு வசதி கிடைக்கும். 8. திருநெல்வேலி பாலக்காடு (வழி தென்காசி) பாலருவி விரைவு இரயிலை (வண்டி எண். 16791/92) தூத்துக்குடி வரை நீட்டித்திட வேண்டும்.
9. மதுரை - செங்கோட்டை சிறப்பு விரைவு இரயிலை (வண்டி எண். 06503/04) கொச்சுவேலி அல்லது திருவனந்தபுரம் வரை வழி கொல்லம்) விரிவுபடுத்தினால் தென்காசி மாவட்ட மக்களுக்கு கேரள மாநில தலைநகருடன் முதல் தொடர்பு இரயில் சேவையாக அமையும்.
கீழ்க்கண்ட இரயில் நிலையங்களில் இரயில் நிறுத்தங்கள் அவசியமாகும் : 1. சென்னை - கொல்லம் விரைவு இரயிலுக்கு (வ.எண். 16101/02) சிவகாசியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
2.பாலருவி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16791/92) இரயிலுக்கு பாவூர்சத்திரம், கீழக்கடையம் இரு வழி நிறுத்தம் வேண்டும்.
3. மதுரை - புனலூர் (வண்டி எண். 16729/30) விரைவு இரயிலுக்கு சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
4. சென்னை-கன்னியாகுமரி விரைவு இரயிலுக்கு (வ.எண். 12633/34) சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
5. சென்னை - திருச்செந்தூர் விரைவு இரயிலுக்கு (வண்டி எண். 16105/06) சாத்தூர், கோவில்பட்டியில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
6.கோயமுத்தூர் நாகர்கோவில் விரைவு இரயிலுக்கு (வ.எண். 22667/68) சாத்தூரில் ஒரு நிமிட நிறுத்தம் வேண்டும்.
7.திருநெல்வேலி - தாம்பரம் (வ.எண். 06004/03) கடையநல்லூர், பாம்புக் கோவில் சந்தை, சங்கரன்கோவில் ஒரு நிமிட இரயில் நிறுத்தம் வேண்டும்.
8. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண். 12662/61) திருமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்.
இரயில் நிலையம் சீரமைத்தல்:
தென்காசி- விருதுநகர் வழித்தடத்தில் சங்கரன்கோவில் - இராஜபாளையம் இடையே அமைந்துள்ள கரிவலம்வந்தநல்லூர் இரயில் நிலையத்தை மீண்டும் புதுப்பித்து இயங்கச் செய்திட வேண்டும்.
இதர கீழ்கண்ட வசதிகள் செய்யப்பட வேண்டும் :
1. விருதுநகர் செங்கோட்டை திருநெல்வேலி புனலூர் பாதையில் மின்மயமாக்கப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.
2. மதுரை கோட்டத்தில் உள்ள இரயில் நிலையங்களில் நடைமேடைகளை தரம் உயர்த்திடவும் பயணிகள் கடந்து செல்ல உயர்மட்ட பாலங்களையும் போதிய அளவு அமைத்திட வேண்டும். நடைபாதை
3. இராஜபாளையம் இரயில் நிலையத்தின் வடமேற்கு பகுதியில் கூடுதல் நுழைவாயில் மற்றும் பார்க்கிங் வசதி செய்திட வேண்டும்.
4. செங்கோட்டை - அச்சன்கோவில்; சங்கரன்கோவில் - புளியங்குடி சாலைகளில் இரயில்வே பாலம் அமைத்திட வேண்டும்.
5. சென்னிகுளம் கரிவலம்வந்தநல்லூரி) சோழபுரம், ராஜபாளையம் இரயில் பாதையில் கடந்து செல்ல அடிமட்ட பாதைகள் அமைக்க வேண்டும். 6.செங்கோட்டை ரயில் நிலையத்தில் Stabling Lines அதிகரிக்க வேண்டும்.
7. தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் இரயில் நிலைய நடைமேடைகளில் மேற்கூரைகளை விரிவுப்படுத்தி அமைக்க வேண்டும்.
8. தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களில் பெட்டிகள் நிற்கும் இடங்களை தொடுதுறையில் தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.
9. 24 பெட்டிகள் நிற்கத்தக்க அளவு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் இரயில் நடைமேடைகளை மேம்படுத்த வேண்டும்.
10. MEMY Shed - மதுரையில் கட்டப்பட வேண்டும்.
11. திருச்செந்தூர் இரயில் நிலைய நடைமேடைகள் விரிவுபடுத்துவதுடன் கூடுதல் நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
12. பாவூர்சத்திரம் இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு உதவியாளர் சிப்ட் முறையில் நியமித்திட வேண்டும்.
13. நாகர்கோவில் வள்ளியூர் இடையே அமைந்துள்ள காவல்கிணறு ரயில் 1 நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.
14. திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே உள்ள காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை பணிகளை விரிவுபடுத்தி முடிக்க வேண்டும். -
15. கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பெருகி வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு தானியங்கி நகரும் படிக்கட்டுகள் கொண்ட பாதை அமைத்திட வேண்டும்.
16. திருநெல்வேலி புறநகர், கன்னியாகுமரி இரயில் நிலையப் பகுதிகளை மதுரை கோட்டத்தில் இணைத்திட வேண்டும்.
17. ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் இடையே கரிவலம் வந்தநல்லூர் ரயில் நிலையம் மீண்டும் வேண்டும்.
விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல இரயில் பாதையாக மாற்றிய போது, கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த ரயில் நிலையத்தை தங்கள் பயணத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதி பயணிகள் ரயில் சேவைகளைப் பயன்படுத்துவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ராஜபாளையம் & சங்கரன்கோவில் இடையே உளள் தூரம் 33 கி.மீ இந்த 33 கி.மீ நீளமான பிளாக் பிரிவு காரணமாக நிர்வாகமும் பல செயல்பட்டு சிரமங்களை எதிர்கொள்கிறது. கரிவலம் வந்தநல்லூர் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலையத்தை உடனடியாக இரயில் நிலையமாகத் திறக்க வேண்டும். இது பொதுமக்களுக்கு உதவுவதோடு, நிர்வாக ரீதியான சிரமத்தையும் குறைக்கும்.
18. ரயில்வே தேர்வு வாரியத்தின் (RRB சென்னை) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் மதுரை கோட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB திருவனந்தபுரம்), தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. சேலம் கோட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, புதிய சேலம் கோட்டம் அமைப்பதற்கு, கேரளத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசியலை அமைதிப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் சிலவற்றை ரயில்வே நிர்வாகம் செய்தது.
(i) பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு நிலையங்கள் மதுரை கோட்டத்தில் இருந்து பிரித்து பாலக்காடு கோட்டத்திடம் ஒப்படைத்தது. (ii) மதுரை கோட்டத்தின் காலி பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த இரண்டு அறிவிப்புகளம் வெளியானபோது, நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போது மேற்கண்ட இரண்டு உத்தரவுகளையும் திரும்பப்பெற்று மதுரை கோட்டத்தை நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோருகிறேன்.
19. திண்டுக்கல் - கோவில்பட்டி இடையே மின்சாரத்தால் குறைந்த மற்றும் நடுத்தர தூரம் வரை இயங்கும் MEMU ரயில் வேண்டும்.
தற்போது திருநெல்வேலி -சென்னை எழுப்பூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் நான்கு ஜோடி மெமு சேவைகளை இயக்க ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடை ரோடு அவ்வாறு இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.
20.கொங்கன் இரயில்வே வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வேண்டும் சுதந்திரத்திற்குப் பிறகு ரயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் இரயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் இரயில்வேயைப் பயன்படுத்தவில்லை. தற்போது ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22630/22629) திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே கொங்கன் ரயில்வே வழியாக அதிக ஆதரவுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே மும்பையை அடைய தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட வேண்டும்.
21. திருமங்கலத்தில் ரயில் எண். 12662/12661 பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும்.
இப்போது ரயில் எண். 12694 தூத்துக்குடி - சென்னை முத்து நகர் விரைவு வண்டி திருமங்கலத்தில் நின்று செல்கிறது. ஆனால் மறு மார்கத்தில் வரும் போது நிற்பதில்லை. இந்த ரயிலின் நேரம் திருமங்கலத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்றதாக இல்லை. எனவே முத்து நகருக்கு பதிலாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் திருமங்கலத்தில் நின்று செல்ல ஆவண செய்ய ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.
22.தெற்கு ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட அனைத்து இரயில் நிலையங்களிலும் இரயில் பெட்டிகள் நிற்கும் இடங்கள் நடைமேடையில் கணினி திரையில் காட்டப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் திரு. வைகோ எம்.பி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

No comments:

Post a Comment